districts

img

கம்பிளிம்பட்டியில் ரூ.13.29 கோடியில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை

திருப்பூர், ஜூன் 8 – வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், கம் பிளிம்பட்டியில் அமராவதி ஆற்றின் குறுக்கே  ரூ.13.29 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணியை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் தொடக்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் தலைமையில், ஈரோடு எம்.பி.அ. கணேசமூர்த்தி முன்னிலையில் தடுப்பணை அமைக்கும் பணியை மாநில தமிழ் வளர்ச்சி  மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கினார்.  காங்கயம் வட்டத்தில் உள்ள கம்பிளியம் பட்டி கிராமம், குமாரசாமி கோட்டை, அணைப்பாளையம், சின்னம்மன் கோவில் பாளையம் ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீரை சேமித்து குடிநீர் ஆதாரத்தை பெருக்கு வதற்காக அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப் பணை அமைக்க பொதுமக்கள் மற்றும் விவ சாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்த னர். அதன் அடிப்படையில் ரூ.13.29 கோடி  மதிப்பீட்டில் இத்தடுப்பணை அமைக்கப்ப டுகிறது. இந்த அணை 170 மீ நீளத்திலும், 1.50  மீ உயரத்திலும் சுமார் 3.18 மி.கன.அடி கொள் ளளவு நீரை தேக்கி வைக்க வசதியாக அமை யும். இதனால் 65 கிணறுகள் 542 ஏக்கர் விளை  நிலங்கள் மற்றும் 110 ஆழ்துளைக் கிணறு கள் மூலம் பாசன வசதி மேம்படும், கம்பிளி யம்பட்டி, சின்னம்மன் கோவில்பாளையம் ஆகிய கிராமங்களில் கால்நடை மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி டையும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித் தார்.