districts

img

வழக்கறிஞர் சங்க 12 ஆவது மாநில மாநாட்டு வரவேற்புக்குழு நன்றி அறிவிப்பு கூட்டம்

திருப்பூர், மே 4 – அகில இந்திய வழக்கறிஞர் சங் கத்தின் 12ஆவது மாநில மாநாட்டை திருப்பூரில் வெற்றிகரமாக நடத்திய  வரவேற்புக்குழு நன்றி அறிவிப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூர் ஊத்துக்குளி சாலை கருணா மஹாலில் நடைபெற்ற வர வேற்புக்குழு நன்றி அறிவிப்புக் கூட் டத்துக்கு வரவேற்புக்குழுத் தலை வர் மூத்த வழக்கறிஞர் ஏ.சின்னசாமி  தலைமை ஏற்றார். இக்கூட்டத்தில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத் தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் கே. சுப்பராயன் வரவேற்றார். முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்பிர மணியம், வழக்கறிஞர்கள் சங்க ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி வி. கே.சுப்பிரமணியம், திருப்பூர் பார் அசோசியேஷன் தலைவர் எம்.பழ னிச்சாமி முன்னாள் தலைவர் ஏ.பால குமாரன் ஆகியோர் பங்கேற்றனர்.  இன்றைய சூழ்நிலையில் வழக் கறிஞர்கள் போராட்டமான வாழ்க் கையை மேற்கொண்டிருக்கும் நிலை யில் அனைத்து வழக்கறிஞர்களை யும் ஒருங்கிணைக்கவும், வழக்கறி ஞர் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு  வரவும், வழக்கறிஞர்களின் பொது வான நலன்களைக் காக்கவும் அகில  இந்திய வழக்கறிஞர் சங்கம் முன் முயற்சி எடுத்து செயல்பட வேண்டும்  என்று மூத்த வழக்கறிஞர்கள் உரை யாற்றினர். அகில இந்திய வழக்கறிஞர் சங்க  தேசியக்குழு உறுப்பினர் எஸ்.பொன் ராம், மாநிலச் செயலாளர் அ.மணவா ளன், மாநிலக்குழு உறுப்பினர்கள் அ. அமர்நாத், எஸ்.தமயந்தி மற்றும் வழக்கறிஞர் குணசேகரன் உள்ளிட் டோர் மாநாட்டு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.  அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவர்  மூத்த வழக்கறிஞர் எஸ்.கண்ணன்,  இளம் வழக்கறிஞர்கள், பெண் வழக் கறிஞர்கள் உள்பட வரவேற்புக்குழு வில் இணைந்து பணியாற்றிய சகோ தர அமைப்புகளைச் சேர்ந்தோர்  என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த  நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில், வரவேற்புக்குழு நிறைவு பெறுவதாக அறிவித்து சங் கத்தின் மாவட்டப் பொருளாளர் ஒ. உதயசூரியன் நன்றி கூறினார்.