districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கடனை திரும்ப செலுத்திய பிறகும், ஆவணத்தை தராத வங்கி

இழப்பீடு வழங்க உத்தரவு! நாமக்கல், நவ.12- அசல் ஆவணங்களை திருப்பி தராத வங்கி, பாதிக்கப்பட்ட வாடிக்கையா ளருக்கு ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூர் கிராமம், அய்யக்கல் புதூரைச் சேர்ந்த வர் கே.நடராஜன் (77). இவரும், இவரது மனைவியும் கோவை மாவட்டம், சிவா னந்தா காலனியில் உள்ள இந்தியன் வங்கியில் வணிக அபிவிருத்திக்காக, தனக்கு சொந்தமான நிலத்தின் அசல் ஆவணத்தை அடமானம் வைத்து, கடந்த 1990 ஆம் ஆண்டு ரூ.10 லட்சம்  கடன் பெற்றுள்ளனர். கடனை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனை யில், வங்கியின் சார்பில் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் நடராஜன் மீதும், அவ ரது மனைவி லட்சுமி மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வங்கிக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஏற்பட்ட சமரச ஒப்பந்தப்படி, ரூ.15 லட்சத்தை பெற்ற கடனுக்காகவும், வட்டிக்காகவும் நடராஜன் திருப்பி செலுத்தியுள்ளார். இதனையடுத்து வங்கியின் சார்பில் கடன் நிலுவையில் இல்லை என்ற சான் றிதழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் சமர்ப்பித்திருந்த அசல் ஆவணத்தை திரும்ப ஒப்ப டைக்குமாறு கடன் வசூல் தீர்ப்பாயம், கடந்த 2022 ஆம் ஆண்டு வங்கிக்கு உத் தரவிட்டுள்ளது. இதன்பின்னரும் அசல் ஆவணத்தை வழங்காததால், நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வங்கியின் மீது நடராஜன் கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற  நிலையில், நீதிபதி வீ.ராமராஜ், உறுப் பினர்கள் ஆர்.ரமோலா, என்.லட்சும ணன் ஆகியோர் செவ்வாயன்று தீர்ப்பு  வழங்கினர். அதில் ஒரு ஆவணத்தை வழங்காமல் காலதாமதம் செய்து வரு வது சேவை குறைபாடு. நான்கு வாரத் துக்குள் வழக்கு தாக்கல் செய்தவ ருக்கு, அவரது அசல் ஆவணத்தை திரும்ப வழங்கவும், சேவை குறைபாட் டிற்காக ரூ.ஒரு லட்சம் வழங்கவும் உத் தரவிடப்பட்டுள்ளது. நான்கு வாரங்க ளுக்குள் இழப்பீட்டுத் தொகையை வழங் கத் தவறினால், காலதாமதம் ஏற்படும் ஒவ்வொரு நாளும் ரூ.ஆயிரத்தை கூடு தல் இழப்பீட்டுத் தொகையாக கணக் கிட்டு வழங்க வேண்டும் எனவும் உத்தர விடப்பட்டுள்ளது.

நெல் அறுவடைப் பணி தொடங்கியது  கொள்முதல் நிலையங்கள் திறப்பு

கோபி, நவ.12- நெல் அறுவடைப் பணி துவங்கியுள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஈரோடுமாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி பாச னத்திற்குட்பட்ட தடபள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்தில் 24ஆயிரத்து 504 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு பாசன பகுதியில் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை தொடங்கி னர். தற்போது அறுவடைக்கு தயாராகி தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசன பகுதியில் நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளது. அறுவடை செய்த நெல்லை அரசின் நேரடி  நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் வகையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அறுவடைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கும்போது கூடுதலாக கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்க்கின் றனர். தற்போது 20 க்கும் மேற்பட்ட இடங்களில் நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதால் அறுவடை செய்யும் நெல்லை விவசாயிகள் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து வருகின்றனர். இக்கொள்முதல் நிலையங்கள் குறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதா வது, ஈரோடு மாவட்டத்தில் 2024-2025 பருவத்திற்கு தடப் பள்ளி அரக்கன்கோட்டை பாசன பகுதிகளிலுள்ள விவ சாயிகளின் நெல்லினை கொள்முதல் செய்யும் பொருட்டு, 37  இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப் பட்டுள்ளது.  காசிபாளையம், கள்ளிப்பட்டி, ஏளூர், நஞ்சை புளியம் பட்டி, புதுவள்ளியம்பாளையம், என்.ஜி.பாளையம், மேவானி, புதுக்கரைப்புதூர், சவுண்டப்பூர், நஞ்சைதுறையம் பாளையம், கொண்டையம்பாளையம், டி.என்.பாளையம், கூகலூர், மற்றும்கருங்கரடு ஆகிய இடங்களில்தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது. மேலும் நெல் அறுவடையின் அடிப்படையில் மாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நல்ல தரமான ஈரப்பதம் 17 சதவிகிதத்திற்குள் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளுக்கு ஏ கிரேடு ரகத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.2 ஆயிரத்து 320 மற்றும் ரூ.130 ஊக்கத் தொகையாக வழங்கப் படும். பொது ரகத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.2 ஆயிரத்து 300 மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.105ம் சேர்த்து  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி ஆணையராக எஸ்.ராமமூர்த்தி நியமனம்

திருப்பூர், நவ.12 – திருப்பூர் மாநகராட்சி ஆணையராக எஸ்.ராமமூர்த்தி நிய மனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை நதிகள் புனரமைப்பு டிரஸ்ட் திட்ட இயக்குந ராகவும், நகராட்சிகள் நிர்வாக கூடுதல் இயக்குநராகவும் செயல்பட்டுவந்த எஸ்.ராமமூர்த்தியை திருப்பூர் மாநகராட்சி  ஆணையராக நியமித்து அரசு முதன்மைச் செயலாளர் டி. கார்த்திகேயன் செவ்வாயன்று ஆணை பிறப்பித்தார். திருப்பூர் மாநகராட்சி ஆணையராக செயல்பட்டு வந்த  ஐஏஎஸ் அதிகாரி பவன்குமார் கிரியப்பனவர் திடீரென மாற்றப் பட்டார். அவருக்கு முன்னதாக இங்கு மாநகராட்சி ஆணைய ராக சிறப்பாகச் செயல்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரி கிராந்திகு மார் பாடி, கோவை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டார். ஏற்றுமதி நகரமான திருப்பூரில் மாநகராட்சி ஆணையராக  செயல்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இருவரும் திறமையாக செயல்பட்டனர் என்று பல்வேறு தரப்பினர் பாராட்டுத் தெரிவித் தனர். எனவே அடுத்து ஆணையராக நியமிக்கப்படுபவரும் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தால் பணிகள் சீராக நடை பெறும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் பவன்குமார் விடுவிக்கப்பட்டு கடந்த 40  நாட்களாக மாநகராட்சி ஆணையர் பணியிடம் நிரப்பப்படா மல் நிர்வாகப் பணிகள் தொய்வடைந்து இருந்தன.  இந்நிலை யில் திருப்பூர் மாநகராட்சி ஆணையராக, நிர்வாகக் காரண அடிப்படையில் சென்னை நதிகள் புனரமைப்பு டிரஸ்ட் திட்ட  இயக்குநர் எஸ்.ராமமூர்த்தி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று  அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பூர், உடுமலையில் இன்று மின்தடை 

உடுமலை, நவ.12 - மின்தடை ஏற்படும் பகுதிகள்: பொன்னேரி, வெள்ளியம்பா ளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதூர், வரதரா ஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமடக்கு மற்றும் குடிமங்க லம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று  செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அதேபோல பூளவாடி, கள்ளப்பாளையம், அப்பிலியா பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று உதவி செயற்பொறியாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.  திருப்பூர் துணை மின் நிலையம்: திருநகர், பாரப்பாளை யம், செங்குந்தர் நகர், பூச்சுக்காடு, கிரி நக்ர், எருகாடு ஒரு  பகுதி, கே,வி.ஆர். ந்கர், மங்கலம் சாலை, அமர்ஜோதி கார் டன், கே.என்.எஸ் கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசல புரம், காதி காலனி, கதர் காலனி, கேவிஆர் தோட்டம், பூசாரி  தோட்டம், கருவம்பாளையம், பொன்னுச்சாமி கவுண்டர் வீதி,  முத்துசாமி கவுண்டர் வீதி, என்.ஆர்.நகர், எல்.ஐ.சி. நகர், ராயபு ரம், எஸ்பிஐ காலனி, சூசையாபுரம், குமரப்பரம், மில்டரி காலனி, கோழிப்பண்ணை ஒரு பகுதி, மாகாராணி டையிங்  பகுதி, அணைப்பாளாஇயம், செல்வம் நகர், புவனேஷ்வரி  நகர், பெரியாண்டிப்பாளையம், ஜெ.ஜெ.நகர், திருவள்ளு வர் நகர், கொங்கணகிரி கோயில், ரங்கநாதபுரம், காலேஜ்  ரோடு பகுதிகள். 15 வேலம்பாளையம் துணை மின்நிலையம்: வேலம்பா ளையம், துரைசாமிபுரம், பாண்டியன் நகர், அம்மாப்பாளை யம், போயம்பாளையம்,  கவிதா நகர், எஸ்.எஸ்.பி நகர்,  வெங்கமேடு, செட்டிப்பாளையம், காளம்பாளையம், ஐஸ்வ ரியா காலனி, பெரியார் காலனி, அனுப்பர்பாளையம் புதூர்,  திலகர் நகர், ஆத்துப்பாளையம், மகா விஷ்ணு நகர், தண்ணீர் பந்தல், ஏவிபி லேஅவுட், நேரு நகர், நஞ்சப்பா நகர், இந்திரா  நகர், சக்திநகர், லட்சுமி நகர், பிட்சம்பாளையம், குமரன் காலனி, கருப்பராயன் கோவில் பகுதி, குருவாயூரப்பன் நகர்,  சஞ்சீவி நகர், அங்கேரிப்பாளையம் ரோடு, கங்கா நகர், ஜூபிட் டர் பகுதி, ஜிகே டெக்ஸ் வீதி, வீரப்பன் செட்டியார் தோட்டம்,  பாரதி நகர், கோபால் மில், சொர்ணபுரி லேஅவுட், ஜீவா நகர்,  பூண்டி, விவேகானந்தா கேந்திரா, அன்னபூர்ணா லேஅவுட்,   டி.டி.பி. மில் பகுதிகள்.

இன்று அவிநாசியில் குறைதீர் கூட்டம்

அவிநாசி, நவ.12- தமிழ்நாடு மின்சார வாரியம், அவிநாசி மின் கோட்ட செயற் பொறியாளர் அலுவலகத்தில் நவம்பர் 13ஆம் (புதன்கிழமை)  காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெறுகிறது. இதில், திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறி யாளர் பங்கேற்று மின் நுகர்வோர் குறைகளை நேரில் கேட்ட றிந்து நிவர்த்தி செய்ய இருக்கிறார். ஆகவே மின் நுகர்வோர்  கலந்து கொண்டு பயன் பெறுமாறு, அவிநாசி கோட்ட செயற்  பொறியாளர் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

முப்படை ஓய்வூதியர் குறை தீர் முகாம்

திருப்பூர், நவ.12- திருப்பூர் மாவட்டத்தில் “ஸ்பார்ஷ் அவுட்ரீச்” திட்டத்தின்  கீழ் முப்படை (ராணுவம், கடற்படை, விமானப்படை) ஓய்வூதி யதாரர்களுக்கு வருடாந்திர உயிர் சான்று அடையாளம் காண வும், அவர்களின் பல்வேறு ஓய்வூதியம் சார்ந்த குறைகளை  தீர்க்கவும், “ஸ்பார்ஷ் விளக்க மற்றும் குறைதீர்க்கும் முகாம்  சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவல கம், தக்ஷின் பாரத் ராணுவ தலைமை அலுவலகம் மற்றும்   திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல சங்கம் இணைந்து  நடத்தியது. முப்படை ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் 250க்கும் மேற்பட்டோர் இம்முகாமில் கலந்து கொண்டனர். ஓய்வூதியதாரர்களின் குறைகள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டு ஓய்வூதிய நிலுவைத் தொகை ரூ.6  லட்சத்திற்கு காசோலையை ஓய்வூதியதாரர்களுக்கு ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் வழங்கினார். இக்கூட்டத்தில், சென்னை பாதுகாப்பு கணக்குகள் உதவி  கட்டுப்பாட்டாளர் எஸ்.சங்கீதா, மாநகர காவல் துணை ஆணையர் கிரிஷ் யாதவ், துறை சார்ந்த அலுவலர்கள், ஓய்வூ தியதாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

கண்டுகொள்ளாத மின்வாரியம்: மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலர் புகார்

திருப்பூர், நவ.12- புதிய மின்கம்பம் அமைத்து மின் இணைப் புகளை வழங்க மின்வாரியத்தில் பல முறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக் கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாநகராட்சி 31ஆவது வார்டு  சிபிஐ மாமன்ற உறுப்பினர் ஆ.ராஜேந்திரன் மனு அளித்தார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்க ளன்று ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமை யில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், அளிக்கப்பட்ட மனுக்கள் வருமாறு:  திருப்பூர் 31ஆவது வார்டு மாமன்ற உறுப் பினர் அ.ராஜேந்திரன் மனு அளித்தார். இதில், 31ஆவது வார்டு டிஎஸ்ஆர் லேஅவுட்  தெருவில் உள்ள ஒரே மின் கம்பத்தில் அதி கமான மின் இணைப்புகள் வழங்கப்பட் டுள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.  மின் கம்பமும் சாய்ந்துள்ளது. புதிய கம்பம்  அமைத்து பழைய கம்பத்தில் உள்ள இணைப் புகளை அதில் மாற்றி வழங்கக் கோரி மின்வா ரிய அலுவலகத்தில் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள் ளது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக இப்பிரச் சனையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்றார்.  உதவித்தொகை கோரிய மாற்றுத்திறனாளி  கண்ணம்மாள் மாசானம் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தாராபு ரம் தாலுகா, தளவாய்பட்டணம் பகுதியில் வசித்து வருகிறேன். நான் கணவரால் கைவி டப்பட்ட மாற்றுத்திறனாளி. எனக்கு மாற்றுத் திறனாளி உதவித்தொகை கோரி விண்ணப் பித்து ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிறது. இன்னும்  எனக்கு எந்த பதிலும் வரவில்லை. எனக்கு 56  வயது ஆகிறது. எனக்கு உடனடியாக உதவித்  தொகை கிடைக்க வழி செய்ய வேண்டும், என்றார். அவதூறு பரப்பும் சமூக ஆர்வலர்  திருப்பூர் 7 ஆவது வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினர் விஜயகுமார் கூறிய தாவது, இந்த வார்டில் தற்போது எனது  மனைவி மாமன்ற உறுப்பினராக உள்ளார்.  எனது சகோதரர் ரியல் எஸ்டேட் தொழில்  செய்து வருகிறார். அவர் 4 ஆண்டுகளுக்கு முன் பொங்குபாளையம் ஊராட்சியில் விற் பனை செய்த சைட்டில் அடிப்படை வசதிகள்  இல்லை என கூறி சிலர் எனது தாய் வீட்டை ஞாயிறன்று முற்றுகையிட்டனர். எனக்கும், அந்த சைட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருப்பினும் இபி.சரவணன் என்ப வர் சமூக வலைதளங்களில் “7ஆவது வார்டு  மாமன்ற உறுப்பினர் அடிப்படை வசதிகள் இல்லாத சைட்டை விற்பனை செய்ததால், மக் கள் அவர் வீட்டை முற்றுகையிட்டனர்,” என  பதிவு செய்து வருகிறார். எனக்கும் அந்த  சைட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  இருப்பினும் பொதுமக்களிடம் எனது  பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக  ஈபி.சரவணன் இப்படி அவதூறு பரப்புகிறார்.  அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவிநாசி தாலு காக்குழு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், அவிநாசி தாலுகா, ராமநாதபுரம் ஊராட்சி யில் வண்டிபாதை அரசு புறம்போக்கு நிலத் தில், நான்கு அருந்ததியர் குடும்பங்கள் 30  ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல்  குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். உடன டியாக அவர்களுக்கு பட்டா வழங்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். சாலையை சீரமைக்க கோரிக்கை திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்வழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பல்லடம் பிரதானச் சாலைக்கு உட் பட்ட வீரபாண்டி, அய்யம்பாளையம் நால் ரோடு, பூங்கா நகர், கோவில் வழி ஆகிய  பிரதானச் சாலையில் பைப் லைனிற்காக குழி  தோண்டி இரண்டு வருடங்கள் ஆகிறது. இன் னும் சாலை சரி செய்யப்படவில்லை. தெரு விளக்கும் இல்லாததால், இவ்வழியாக இரவு  நேரங்களில் வரும் வாகனங்கள் இங் குள்ள குழிகளில் விழுந்து விபத்திற்கு  உள்ளாகின்றன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே சாலையை ஆய்வு  செய்து உடனடியாக சீரமைக்க வேண்டும்  என புரட்சி பாரதம் கட்சி சார்பில் அளிக்கட் பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.  இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலு வலர் க.கார்த்திகேயன் உள்ளிட்ட  அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் குடியிருப்புக்கு அடிப்படை வசதி: நடுவச்சேரி சிபிஎம் கோரிக்கை மனு

அவிநாசி, நவ.12 – நடுவச்சேரி  பகுதியில் தெரு விளக்கு, தார்ச் சாலை, சாக்கடை உள் ளிட்ட வசதிகள் இல்லாமல் மக்கள் அவ திக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பி ரச்சனைக்கு தீர்வு காணக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று வட்டார வளர்ச்சி அலு வலரிடம் மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி  ஒன்றியம் நடுவச்சேரி ஊராட்சிக்குட் பட்ட எம்ஜி கார்டன், பூமாதேவி நகர்,  ஏவிஎஸ் மகாலட்சுமி நகர், வைஷ்ணவி  கார்டன், எஸ்எஸ் கார்டன் ஆகிய பகுதி களில்  100க்கும்  மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான தெரு விளக்கு, தார் சாலை, சாக்கடை உள் ளிட்ட வசதிகள் இல்லாமல் மிகவும்  அவதிப்பட்டு வருகின்றனர். இதுகு றித்து ஊராட்சி  நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை, எனவே உட னடியாக இப்பிரச்சினைகளை தீர்க்கக் கோரி  வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய குமாரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் நடுவச்சேரி கிளைச் செயலா ளர் ராஜேஷ் தலைமையில் மனு அளிக் கப்பட்டது. அதேபோல் கே.சி.வரதராஜ நகர்  ஆதிதிராவிடர் காலனிப் பகுதியில் நான்கு  தெரு விளக்குகள் எரியவில்லை. இதை  உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரி விரைவில் கோரிக்கைகளை நிறைவேற் றித் தருவதாக தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில், கட்சியின் ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி, ஒன்றி யக் கவுன்சிலர் பி.முத்துசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் வேலுச்சாமி, ஊராட்சி  மன்ற உறுப்பினர் ரங்கசாமி உட்பட  பொதுமக்கள் பலர் கலந்து கொண்ட னர். மேலும் இப்பகுதி பொதுமக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத் தப்பட்டது.

பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக  புதிய கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்

திருப்பூர், நவ.12- திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தின் புதிய கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செவ்வாயன்று சென்னை தலைமைச் செயலகத்தி லிருந்து காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்  க.செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் செவ் வாயன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை  தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக  ஒதுக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.3.42 கோடி மதிப்பீட் டில் கட்டப்பட்ட புதிய பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவ லக கட்டிடத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, பொங்கலூர் ஊராட்சி ஒன்றி யக்குழுத் தலைவர் குமார் உள்ளிட்ட தொடர்புடைய அரசு  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பேருந்துகள் வந்து செல்லாததால் அவிநாசி பொதுமக்கள் அவதி

அவிநாசி, நவ.12- அவிநாசி நகருக்குள் பேருந்துகள் வந்து  செல்லாததால், பொதுமக்கள், பள்ளிக் குழந் தைகள், தொழிலாளர்கள் அவதிக்கு உள்ளா கின்றனர்.  திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பேருந்துகள் அவிநாசி நகர் வழியாக, கோவை செல்வது வழக்கம். ஆனால் பல  ஆண்டுகளாக பேருந்துகள் அவிநாசி நகருக் குள் வராமல், பைபாஸ் பாலம் வழியாக சென்று வந்தது. இதனை கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப் புகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி உள்ள னர். மேலும், துறை சார்ந்த அதிகாரிகள்,  சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவிநாசி  ஒன்றியக்குழு சார்பில் 2023 மார்ச் 3 ஆம் தேதி  தனியார் பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால்   பெண் உயிரிழந்ததை கண்டித்து ஆட்டையம் பாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதையடுத்து அவிநாசி நகர்  வழியாக பேருந்துகள் வந்து செல்லும் என  அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். இருப் பினும் சில நாட்களாக காலை நேரத்தில், அவி நாசி நகருக்குள் பேருந்துகள் வந்து செல்லாத தால் பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாண விகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப் பினரும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகு றித்து மாவட்ட ஆட்சியரும், நாடாளுமன்ற உறுப்பினரும் தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும்  என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் அகற்றம்

பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் அகற்றம் கோவை, நவ.12- பொள்ளாச்சியில், போக்குவரத்து வட்டார அலுவலர் தலைமையில் அதிகாரிகள் பேருந்துகளில் ஏறி ஆய்வு மேற் கொண்டு. அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை அகற்றி னர்.  பொள்ளாச்சி பகுதிகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் களை பொறுத்தி தனியார் பேருந்துகள் இயங்கி வரு கின்றன. அவ்வாறு அதிக ஒலி எழுப்பும் பேருந்துகளால் ஒலி  மாசுபாடு ஏற்படுவதோடு விபத்துகளும் ஏற்படுகிறது. இது  குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த னர்.  இதனையடுத்து, ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி, அதிக  ஒலி எழுப்பும் ஹாரன்களை கொண்ட பேருந்துகளை ஆய்வு  செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். இத னையடுத்து செவ்வாயன்று பொள்ளாச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ் தலைமையில் சிடிசி  மேடு பகுதியில் ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட  அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதிக ஒலி உள்ள  ஹாரன்களை பொறுத்தியிருந்த பேருந்துகள் கண்டறி யப்பட்டு, அதிலிருந்து ஒலி எழுப்பிகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து இதுபோன்ற அதிக ஒலி எழுப்பும் கருவிகளை பேருந்துகளில் பயன்படுத்தினால், பேருந்து உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.