சேலம், மே 30- சேலத்தில் பள்ளி மற்றும் கல்லூ ரிகளில் ஆணாதிக்கத்தை போதிக் கும் வகையில் நடைபெறும் ஆர் எஸ்எஸ் பயிற்சி முகாம்களை தடை செய்ய வேண்டும் என தமுஎகச சேலம் மாவட்ட மாநாட்டில் வலியு றுத்தப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட 13வது மாநாடு சனியன்று மேட்டூர் ஆர்எஸ் புதுச்சாம்பள்ளி பி.ராமமூர்த்தி நினைவகத்தில், மதுரபாரதி அரங்கில் துவங்கியது. அசோகன் முத்துசாமி நுழைவா யிலை கவிஞர் கூடல் மணியன் திறந்து வைத்தார். எஸ்.வசந்தி வர வேற்புரை ஆற்றினார். ஜி.கண்ணன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எழுத்தாளர் அ.கரீம் மாநாட்டை துவக்கி வைத்து உரை ஆற்றினார். கலை இலக்கிய பெரு மன்ற மாநில செயலாளர் கவிஞர் நாணாற்காடன், மாவட்ட நிர்வாகி ஏ.அனுராதா ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். நிறைமதி, செ. ஜெயக்குமார், சேக் அப்துல்லா ஆகியோர் அறிக்கையை சமர்பித்து பேசினர். தீர்மானங்கள் இம்மாநாட்டில், தமிழக அரசின் துறைகளில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சேலத்தில் அரசு நிதி உதவிபெ றும் தனியார் பள்ளி மற்றும் கல் லூரியில் பெண் அடிமையைப் போதிக்கும் ஆர்எஸ்எஸ் பயிற் சியை தடைச் செய்ய வேண்டும். அனைத்து கோவில்களிலும் தமி ழில் அர்ச்சனை செய்வதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய நிர்வா கிகள் தேர்வு நடைபெற்றது, இதில், தலைவராக எஸ்.வசந்தி, செயலா ளராக ஜி.கண்ணன், பொருளா ளராக சேக் அப்துல்லா உள்ளிட்ட 39 பேர்கள் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா நிறைவுரையாற்றினார். முன்னதாக, மாங்குயில் தப்பாட்டம், கரிசல்குயில் கிருஷ்ணசாமி, மாங்கு யில் வசந்தி ஆகியோரின் இசைப் பாடல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.