districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

உடலை வலிமைக்காக  புரோட்டீன் பவுடர் உட்கொண்டவர் பலி

கோவை, மே 6- உடலை வலிமைக்காக அதிகளவு புரோட்டீன் பவுடர் உட்கொண்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். எடையைக் குறைக்க  வேண்டும் என்பன போன்ற காரணங்களுக் காக புரோட்டீன் பவுடர் எனப்படும் புரத மாவு களை எடுத்துக் கொள்ளும் வழக்கம் பரவ லாகக் காணப்படுகிறது.  உடற்பயிற்சிக் கூடங் களுக்குச் செல்பவர்கள், வெவ்வேறு விளை யாட்டுகளில் ஈடுபடுவோர் மத்தியில் இது அதிகமாக உள்ளது.   கோவை, கணபதி மணியக்காரம் பாளையம் கீரைத்தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (70). இவரது மகன் தினகர் (30). இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி  வந்துள்ளார். மேலும் உடலை முறுக்கேற்ற உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று வந்துள் ளார். மேலும், அதிகளவு அசைவ உணவு கள் மற்றும் புரோட்டீன் பவுடரை உட் கொண்டு வந்துள்ளார். இதனால் அவரது  உடல் நலம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வியாழனன்று உடற் பயிற்சி கூடத்திற்கு செல்லாமல் தினகர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது திடீரென  வாந்தி எடுத்த நிலையில், கடும் வயிற்று வலி யால் அவதிப்பட்டார். இதையறிந்த, அவர் குடும்பத்தினர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரி ழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, சரவணம் பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க ஆசைப் பட்டு அளவுக்கு அதிகமான புரோட்டீன் பவுடர் சாப்பிட்ட இளைஞர் உயிரை பறி கொடுத்தது, அவரது நண்பர்கள் மற்றும்  குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற் படுத்தி உள்ளது.

நொய்யல் ஆற்றில் நுரையுடன் செல்லும் கழிவுநீர்

கோவை, மே 6- கோவையில் உள்ள தொழிற் சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளால் நொய்யல் ஆற்றில் நுரையுடன் செல்லும் கழிவு நீரால் பொதுமக்கள் கவலையடைந் துள்ளனர்.  கோவை, ஒண்டிப்புதூர் நெசவாளர்  காலனியில் இருந்து பட்டணம் பகுதிக்கு செல்லும் பகுதியில் நொய்யல் ஆறு  செல்கிறது. நொய்யல் ஆறு மேற்குத்  தொடர்ச்சி மலையில் உருவாகி கோவை, திருப்பூர் ஈரோடு வழியாக  கரூர் மாவட்ட காவிரியில்  கலக்கிறது.  இந்த ஆறு 172 கி.மீ. தூரத்திற்கு குப்பை,  பிளாஸ்டிக் கழிவு, தொழிற்சாலை களில் இருந்து வெளியேறும் ரசாயன  கழிவுகளால் மாசடைந்துள்ளது.   இதனால், ஒண்டிப்புதூர் நெச வாளர் காலனியில் இருந்து பட்டணம்  செல்லும் வழியில் உள்ள அணைக் கட்டில், நொய்யல் ஆறு சாக்கடை கழி வால் கருமை நிறமாக காட்சியளிக் கிறது. மேலும், ராசயன கழிவு கலப்ப தால் நுரை ததும்பி செல்கிறது.  எனவே, நொய்யல் ஆறு மாசுபாடு வதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஏடிஎம் கொள்ளை: ஒருவர் கைது

திருப்பூர், மே 6- சேலம் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு, சரக்கு வாக னத்தில் தப்பியோடிய வடமாநில இளைஞர் ஒருவரை, அவி நாசி நெடுஞ்சாலை போலீசார் கைது செய்து சேலம் போலீ சாரிடம் ஒப்படைத்தனர். சேலத்தில் வெள்ளியன்று இரவு ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு தப்பியோடிய 4 பேர் கொண்ட கும்பலில் ஒருவரை  அவிநாசி நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மடக்கிப் பிடித்து சேலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அமேசான் டெலிவரி சரக்கு வாகனத்தில் தப்பி வந்த அவனை சேலம் போலீசார் பின்தொடர்ந்து வந்து கொடுத்த தகவலின் அடிப்படையில் அவிநாசி பைபாஸ் சாலையில் கோவை மார்க்கமாக வரும் போது நெடுஞ்சாலை ரோந்து போலீசார், ஹரியானாவை சேர்ந்த ராஜ் காத் அலி (35) என்பவரை கைது செய்து, சரக்கு வாகனத்துடன் சேலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை சேலம் போலீசார் சரக்கு வாகனத்துடன் சேலத்திற்கு கொண்டு சென்றனர்.

சாலைகளில் பெருக்கெடுத்த மழை நீர்

சேலம், மே 9- சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல்வேறு முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வடக்கு தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டலம் மேல் அடுக்கு சுழற்சி, தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உரு வாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் திருப்பத் தூர், வேலூர், சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந் தது. சேலத்தில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் 100 டிகிரி கடந்து 106 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் அதிக ரித்து காணப்பட்டு வந்தது. இந்நிலையில் சேலம் பழைய  பேருந்து நிலையம், ஏற்காடு அடிவாரம், ஐந்து ரோடு, அயோத்தியபட்டினம், சீலநாயக்கன்பட்டி, ஓமலூர், மல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இத னால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நகர் முழு வதும் வெப்பம் தணிந்து, குளிர்ந்த நிலை காணப்படுகிறது இத னால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மாயம்

திருப்பூர், மே 6- திருப்பூரில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் காணாமல் போனதாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பூஷன். அவரது மனைவி ராணி தேவி. இவர்கள் திருப்பூர் சந்தைப்பேட்டை பகுதியில் இரண்டு ஆண் குழந்தைகளோடு தேநீர் கடை நடத்தி வரு கின்றனர். இந்நிலையில் பூசன் கஞ்சா விற்பதாக சந்தேகத்தின் பேரில் வியாழனன்று திருப்பூர் தெற்கு காவல் துறையினர் அவரை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென் றுள்ளனர். அப்போது அவரது மனநலம் பாதிக்கப்பட்ட நிலை யில் இருந்த 5 வயது கெளரப்குமார் என்ற மகன் தந்தை  சென்ற காவல் துறையினர் வாகனத்திற்கு பின்பு அழுதவாறுச் சென்றுள்ளார்.  விசாரணை முடிந்து வீட்டிற்கு வந்த பூசுனிடம் தனது மகன் காணவில்லை என மனைவி தெரிவித்தார். இத னால் அதிர்ச்சியடைந்த பூசன் மற்றும் அவரது மனைவி இருவ ரும் அருகில் இருந்த கடையின் சிசிடிவி கண்காணிப்பு கேமரா வில் ஆய்வு செய்தனர். அப்போது மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ஐந்து வயது சிறுவன், தந்தை சென்ற காவல்துறையினர் வாகனத்திற்கு பின் னால் சென்றதும், அதன் பின்பு காணாமல் போனதும் தெரிய வந்தது. இது குறித்து வட மாநில தம்பதியினர் சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பிற்கு புகார் அளித்து காணாமல் போன சிறு வனை தேடி வருகின்றனர்.