நாமக்கல், டிச.26- ஆங்கில புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில், அடுமனை (பேக்கரி)களில் கேக் குகள் தயாரிக்கும் தீவிரமடைந்துள்ளது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு என் றாலே விதவிதமான கேக் வகைகள் தான் நமது நினைவுக்கு வரும். மேலும் கிறிஸ்து மஸ் பண்டிகையை காட்டிலும், ஆங்கில புத் தாண்டு நாளில் நடு இரவில் பட்டாசு வெடித்து, கேக்குகள் வழங்கி இளைஞர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 2024 ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்க இளைஞர்கள் பட்டாளம் இப்போதே தயா ராகி வருகிறது. இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையிலும் பள்ளிபாளை யத்தில் உள்ள பேக்கரிகளில், விதவிதமான வடிவங்களில், ஆங்கில புத்தாண்டுக்கென பிரத்தியேகமான கேக்குகள் தயார் செய் யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பள்ளிபாளையம் - சங்ககிரி சாலையில் பேக்கரி மற்றும் கேக்குகள் தயா ரிக்கும் சிறு தொழில் நடத்தி வரும் சிவம் என்பவர் கூறுகையில், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு நாளில், பொது மக்கள் நாங்கள் டிசைன் செய்து வைத்துள்ள கேக் வகைகளை வாங்கிச் செல்வார்கள். தற்போது கடைக்கு வரும் வாடிக்கையாளர் கள் அவர்கள் எண்ணத்திற்கு ஏற்ப, புதிய வகையான டிசைன்களில் அரை கிலோ முதல் 5 கிலோ வரையிலான கேக்குகளை ஆர்டர் கொடுக்கிறார்கள். நாங்களும் அவர்கள் விருப் பத்திற்கு ஏற்ப உடனுக்குடன் கேக்குகளை தயார் செய்து கொடுத்து வருகிறோம். முன்பை காட்டிலும் தற்போது பல்வேறு மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தின் கார ணமாக இந்தாண்டு விற்பனை செய்யப்படும் கேக்குகளில் கணிசமான அளவு விலை உயர்த்தி தர வேண்டிய நிலையில் உள் ளோம். வருடம் முழுவதும் கேக் தயாரிப்பு பணியில் நாங்கள் ஈடுபட்டாலும், வருடத்தின் கடைசி இரண்டு நாட்கள் மற்றும் வருடத்தின் முதல் துவக்க நாளில் மட்டுமே அதிகளவு கேக்குகள் விற்பனையாகிறது, என்றார்.