districts

img

சாக்கடையில் கொட்டும் கோழிக் கழிவுகளால் துர்நாற்றம்

திருப்பூர், ஏப். 16 - திருப்பூர் அருகே கோழிக்கழிவுகளை சாக்கடையில் வெளியேற்றுவதை  கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்  செய்தனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மும்மூர்த்தி நகர் பகுதி யில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இப் பகுதியில் இயங்கி வரும் கோழிக்கடையில் இருந்து கழிவுகளை சாக்கடையில் வெளியேற்றுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பல முறை கடை ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும் நடவ டிக்கை எடுக்காததால், ஆவேசமடைந்த பொதுமக்கள் பெருமாநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதை  தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.