திருப்பூர், நவ.25 - வருங்கால வைப்பு நிதியை பங்கு மார்க்கெட் சூதாட்டத்தில் முதலீடு செய்யக் கூடாது என்று இபிஎஸ் 95 ஓய்வூதியர்கள் நலச் சங்கப் பேரவை வலியுறுத்தி உள்ளது. இபிஎஸ் 95 ஓய்வூதியர் கள் நலச் சங்கத்தின் கோவை, திருப்பூர், நீல கிரி மாவட்டப் பேரவை திருப்பூரில் ஞாயிறன்று நடைபெற்றது. திருப்பூர் சிஐடியு மாவட்ட தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் 95 ஓய்வூதியர்கள் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் சி.ஈஸ்வர மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த பேரவை கூட்டத்தில் திருப்பூர் மாவட்டச் செய லாளர் கோபால் முன்னிலை வகித்தார். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 150 ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட னர். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஜி. சம்பத், எம்.எல்.எப் நிர்வாகி மு.சம்பத், எச்எம் எஸ் நிர்வாகி அப்புகுட்டி, ஏடிபி நிர்வாகி ஆர். தேவராஜ், எல்பிஎப் நிர்வாகி ராமதாஸ் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். ஓய்வூதியர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.ராமையன், அகில இந்திய துணைக் குழு உறுப்பினர் ஏ.ஆர்.துரைசாமி, கோவை மாவட்டத் தலைவர் ஆர்.நாகராஜ், நீலகிரி மாவட்டச் செயலாளர் டி.பிரித்விராஜ் ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசி னர். இதில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி தகுதியுள்ள அனைவருக்கும் உயர் பென் ஷன் வழங்க வேண்டும், தொழிலாளர் வைப்பு நிதித் தொகையை பங்கு மார்கெட் சூதாட்டத் தில் முதலீடு செய்யக்கூடாது, பறிக்கப்பட்ட ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் மூத்த குடிமக்களுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டும், மிகக் குறைந்த ஓய்வூதியம் பெறக் கூடிய இபிஎஸ் ஓய்வூதியர்களுக்குத் தமிழ் நாட்டில் சமூக பாதுகாப்பு நலத்திட்ட நிதி ரூ.2000 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் நடராஜ் நன்றி கூறினார்.