districts

img

பனிக்காலத்தில் பூக்கும் அஜிலியா மலர்கள்

உதகை, பிப்.9- உதகை அரசு தாவரவியல் பூங்கா வில் பனிக்காலத்தில் பூக்கும் அஜிலியா  மலர்கள் பூத்துள்ளது. இதனை, சுற்று லாப் பயணிகள் கண்டு களித்தனர். உலகப் புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள், மூலிகை தாவரங்கள், பெரணிகள், கள்ளிச் செடிகள் மற்றும் மரங்கள் ஆகியவை உள்ளன. அதே போல், பல வெளி நாடுகளில் காணப் படும் புகழ் வாய்ந்த மரங்கள், மலர் செடி கள் இங்கு வளர்க்கப்படுகிறது. இவை கள் அந்தந்த பருவங்களில் மட்டும் பூக் கும் தன்மை கொண்டதாக உள்ளது. இந்நிலையில், இத்தாலியன் பூங்கா  மற்றும் கண்ணாடி மாளிகை அருகில் பனிக்காலத்தில் பூக்கும் அஜிலியா மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. இந்த மலர்கள் எப்போதும் பனிக்காலத்தில் மட்டுமே பூக்கக் கூடியவை ஆகும். சில மாதங்கள் இந்த செடிகளில் மலர் கள் இன்றி புதர் போன்று காட்சியளிக் கும். தற்போது வெள்ளை மற்றும் இளஞ் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள அஜிலியா மலர்களை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும், அஜிலியா மலர்கள் சுற்றுலாப்  பயணிகள் கண்களுக்கு விருந்தாக உள்ளதால், இதனை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.