districts

img

சிக்கண்ணா கல்லூரியில் ஆயுர்வேத கண்காட்சி

திருப்பூர், அக். 18 - ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2  மற்றும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து  செவ்வாயன்று கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில்  ஆயுர்வேத கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு  விருந்தினராக மாவட்ட சித்த மருத்துவர் தனம், உதவி மருத் துவ அதிகாரி பாபு ஆகியோர் ஆயுர்வேத முக்கியத்துவத்தை யும், அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி னர். அரங்கில் ஆயுர்வேத பொருட்களின் கண்காட்சி நடை பெற்றது. அரிமா தலைவர் நாராயணன், மருத்துவர் கவிதா  வாழ்த்துரை வழங்கினர். போராசிரியர்கள் மற்றும் மாணவர் களை பரிசோதித்து மருந்துகள் இலவசமாக வழங்கப்பட் டது. இந்நிகழ்வில் மாணவ செயலர்கள் சுந்தரம், அருள் குமார், பாலசுப்பிரமணியம், அரவிந்தன், பூபாலன் ஆகியோர் தலைமையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. எதிர்ப்பு  சக்தியை உருவாக்கும் கசாயம் அனைவருக்கும் வழங்கப் பட்டது. கண்காட்சியை 1400க்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள், பேராசிரியர்கள் பார்வைவையிட்டு பயனடைந்தனர்.