சேலம், டிச.30- குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கக்கூடாது, என வலியுறுத்தி ஜலகண்டாபுரத்தில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றுது. பகத்சிங் கிரிக்கெட் கிளப் சார்பில், குழந்தைகளுக்கு செல் போன் கொடுக்கக்கூடாது என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. சேலம் மாவட் டம், ஜலகண்டாபுரம் ஸ்ரீராமலிங்க கிருஷ்ணவேணி மண்ட பத்தில் தொடங்கி நங்கவள்ளி வரை நான்கு குழுக்களாக மினி மாரத்தான் போட்டியில் சிறுவர்கள், பெண்கள் ஆண்கள் என தனித்தனியே பங்கேற்றனர். மாரத்தான் போட்டியை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை சண்முகராஜா துவக்கி வைத்தார். இதில் 1500க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் போட்டியை ஒருங் கிணைத்து நடத்தினார்.