கோவை, நவ.21– தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தையொட்டி, அதிகமுறை ரத்ததான முகாம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள் ளிட்ட அமைப்புகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி கௌரவித்தார். விபத்து மற்றும் அவசர அறுவை சிகிச்சை போன்றவற்றின் தேவைக் காக ரத்தம் சேகரிக்கப்படுகிறது. கோவை அரசு மருத்துவமனை யில் ரத்த வங்கி செயல்பட்டு வரு கிறது. இதில், தன்னார்வ அமைப்பு கள், அரசியல் இயக்கங்கள், தனி நபர்கள் ரத்ததானம் செய்கின்ற னர். முன்னதாக கோவை மாவட் டத்தில் கடந்த 2021-2022 ஆண்டில் 114 ரத்ததான முகாம்களின் மூலம், 5,901 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட் டுள்ளது. இதில், 53 அமைப்புகள் இந்த மகத்தான சேவையில் பங் காற்றியுள்ளனர். இவர்களின் உயிர்காக்கும் நட வடிக்கையை ஊக்குவிப்பதற்காக வருடம் ஒருமுறை தேசிய தன் னார்வ ரத்ததான தினத்தில் கௌர விக்கபடுகின்றனர். அதன்படி திங் களன்று கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில், ரத்த தான முகாம் நடத்திய அமைப்பு களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் விருது வழங்கி கௌரவித் தார். இந்நிகழ்வில் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இணை இயக்கு நகர் சந்திரா மற்றும் மாவட் ரத்த வங்கி அலுவலர் மங்கையர்கரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக இந்நிகழ்வில், இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் ரத்ததான கழகம், தளபதி ரத்த தான இயக்கம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், நேவி ஐஎன்எஸ் அக்ரானி, ரோட் டரி கிளப் உள்ளிட்ட 53 அமைப்பு களுக்கு விருது வழங்கி கௌர விக்கப்பட்டனர்.