districts

img

அவிநாசி ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி தேர்வு

அவிநாசி, செப்.30 - திருமுருகன்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அவிநாசி  ஒன்றிய 12ஆவது மாநாட்டில்  ஒன்றியச் செயலாளராக அ. ஈஸ்வரமூர்த்தி தேர்வு செய் யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவி நாசி ஒன்றிய மாநாடு திருமுருகன் பூண்டியில்  தோழர் என்.சங்கரய்யா நினைவரங்கில் நடை பெற்றது. பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே அவிநாசி அதிர்வுகள் கலைக்குழு பறை இசை முழங்க மூத்த கட்சி உறுப்பினர் மணி  செங்கொடியை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து பேரணியாகச் சென்று மாநாட்டு அரங்கை அடைந்தது. ஒன்றியக்குழு உறுப் பினர் வெங்கடாசலம், அய்யம்மாள், மணி கண்டன் ஆகியோர் தலைமையில் மாநாடு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் திரு முருகன்பூண்டி நகர்மன்ற உறுப்பினர் தேவ ராஜன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார். ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி வேலை அறிக்கையை முன் வைத்தார். இதைத் தொடர்ந்து 15 பேர் கொண்ட ஒன் றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் ஒன்றியக்குழுச் செயலாளராக மீண்டும் அ.ஈஸ்வரமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். 22 பேர் மாவட்ட மாநாட்டுப் பிரதிநிதி களாகத் தேர்வு செய்யப் பட்டனர். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.நந்தகோபால் வாழ்த்திப் பேசினார். கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.காம ராஜ் நிறைவுறையாற்றினார்.  இதில், அவிநாசி அத்திக டவு திட்டத்தில் விடுபட்ட  குளம் குட்டைகளை இணைக்க வேண்டும்.  அவிநாசி அரசு மருத்துவமனையைத் தரம்  உயர்த்தி, 24 மணி நேர அவசர சிகிச்சைப்பிரிவு  டிராமா கேர் சென்டர், குளிர்சாதன வசதியு டன் சவக்கிடங்கு அமைக்க வேண்டும். அவி நாசி மயானத்தை நவீன வசதிகளுடன் கூடிய  மின் மயானமாக மாற்ற வேண்டும். அவிநாசி  அரசு கலைக் கல்லூரியில் பாடப் பிரிவுகளை  அதிகமாக்கி மாணவர்கள் சேர்க்கையை அதி கப்படுத்த வேண்டும், வஞ்சிபாளையம், கருக்கன்காட்டுப்புதூர் பள்ளிகளை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தவும், அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பி குடிநீர், கழிப் பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து  தர வேண்டும் உள்ளிட்ட இருபதுக்கும்  மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. மேலும் கட்சியின் மூத்த நிர்வாகிக ளுக்கு பயனாடை அணிவித்து கௌரவிக்கப் பட்டது. இறுதியாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருமுருகன்பூண்டி நகர் மன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் நன்றி கூறி னார்.