காலமானார் அவிநாசி, ஆக.27- அவிநாசி ஊராட்சி ஒன்றி யக்குழு தலைவர் ஜெகதீசன் காலமானார். அவரது உட லுக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், நம்பியம் பாளையம் ஊராட்சி சேர்ந்த வர் அ. ஜெகதீசன். இவர், நம்பியம்பாளையம் ஊராட்சி யில் ஒன்றியக் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு, ஊராட்சி ஒன்றிய சேர்மனாக தேர்வானார். இந்நிலை யில், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீ ரென்று மயக்கம் ஏற்பட்டு, அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்து வர்கள் பரிசோதனை செய்ய போது மாரடைப்பு ஏற் பட்டு மரணம் அடைந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இவரது உடல், அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியக்குழு சார் பில், ஒன்றியக் கவுன்சிலர் முத்துசாமி, ஒன்றியச் செயலா ளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் பழனிசாமி உள்ளிட்டோர் ஜெகதீசனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் பரமேஸ்வரன், ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், ஊராட்சிச் செயலாளர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.