அவிநாசி நவ.18 - அவிநாசியில் மத சார்பற்ற கூட்டணி கட்சியின் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கள் வட்டார வளர்ச்சி அலுவலரை சந் தித்து வெள்ளியன்று அதிமுக கவுன்சி லர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவ தாக புகார் மனு அளித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி. முத்துசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சத்தியபாமா அவிநாசியப்பன்,சேதுமாதவன், கார்த்தி, சீனிவாசன், உமாபதி, மறும லர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தைச் சேர்ந்த சர்மிளா ஆகிய ஒன்றிய கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவ லரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இம்மணுவில்,பதினைந்தாவது மாநில நிதி குழு மூலம் எவ்வளவு நிதி ஒவ்வொரு ஒன்றிய கவுன்சிலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க கோரியும், அவிநாசி ஊராட்சி ஒன்றிய பொது நிதி 2021 ஜனவரி முதல் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி நடப்பு ஆண்டு வரை ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு எவ்வ ளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என் பதை தெரிவிக்க கோரியும், அவிநாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும், அதிமுக கவுன்சி லர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட் டுள்ளனர்.
மேலும் ஊராட்சி ஒன்றியத்தின் மூல மாக டென்டர்கள் விடப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் வேலை செய்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு வழங் கப்படும். முடிக்கப்படாத வேலைக ளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என் பதை தெரிவிக்க கோரியும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட வேலை கள் மூன்று ஆண்டுகளாக இதுவரை முடிவடையாமல், சில வேலைகள் இன் னும் தொடங்கப்படாமல் உள்ளது. இந்த விபரங்களை தெரிவிக்ககோரி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் ஈஸ் வரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகம், திரா விட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, சிவப் பிரகாஷ், பால்ராஜ், மறுமலர்ச்சி திரா விட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒன்றிய பொறுப்பாளர் கோவிந்தராஜ், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கோபாலகிருஷ்ணன், சாய் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.