கோவை, ஆக.30- கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் பொருத்தப்பட்டி கும் குரங்கு அம்மை நோய் அறிகுறி கள் கண்டறியும் தானியங்கி கருவி மற்றும் மருத்துவ பரிசோதனை அறையை அமைச்சர் மா.சுப்பிர மணியம் ஆய்வு செய்தார். உலக சுகாதார அமைப்பின் அறி வுறுத்தல் படி, 123 நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்க ளில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய, மருத்துவ முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப் பட்டிருக்கும் பரிசோதனை முகா மினை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழவுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் வெள்ளியன்று ஆய்வு செய்தார். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு காய்ச் சல் இருக்கிறதா என்பதை கண்டறி யும் தானியங்கி கருவி பொருத்தப் பட்டுள்ளது. மருத்துவ பரிசோ தனை அறியையும் ஆய்வு செய் தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணி கூறுகை யில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாட்டு பய ணிகளை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக முகாம்கள் அமைக் கப்பட்டிருக்கிறது. குரங்கம்மை நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே பதாகை அமைக்கப்பட்டிருக்கிறது. பாதிப்பு கள் கண்டறியப்பட்டால் இந்த நான்கு நகரங்களிலும் இருக் கக்கூடிய மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகளில் முன்னெச்சரிக் கையாக மருத்துவ சிகிச்சை தனி வார்டுகள் அமைக்கப்பட்டு இருக்கி றது. உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையின்படி 123 நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை நோய் தமிழகத்தில் பரவாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுக்கப்பட்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்ப டுத்தப்பட்டு வருகிறது. மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத் ்தப்பட்டு, நோயாளிகளின் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.