districts

img

ஒன்றிய மோடிக்கு எதிராக ஆட்டோ தொழிலாளர்கள் தேர்தல் பிரச்சாரம்

சேலம், ஏப்.17- மோட்டார் தொழிலை நாசமாக்கிய மோடி அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கூறி சேலம் மாவட்ட சாலை போக்குவரத்து மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் தேர்தல் பிரச்சா ரத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை  உயர்த்தி, அனைத்து பொருட்களுக்கும் தனித்தனியே  ஜிஎஸ்டி வரியை விதித்த ஒன்றிய பாஜக அரசிற்கு இனியும் வாக்களித்தால், மக்கள் மேலும் பல ஆண்டு கள் பின்னோக்கி செல்வார்கள். பொருளாதாரத்தை முன் னேற்றுவோம் என கூறிக்கொண்டு பொருளாதாரத்தை கேள்விக்குறியாக மாற்றிய பாஜக அரசை வீழ்த்துவோம். குறிப்பாக, மோட்டார் வாகனச் சட்டத்தை கொண்டு வந்து,  தற்போது மோட்டார் தொழிலை அழித்து வரும் மோடி அர சுக்கு எதிராக இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண் டும் எனக்கூறி, சேலம் மாவட்ட சாலை போக்குவரத்து மற்றும் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் தேர்தல் பிரச்சா ரத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், வாழப் பாடி, மேட்டூர், எடப்பாடி, தீவட்டிப்பட்டி, தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், மாநகரத்தில் சேலம் ஜங்ஷன், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சீலநாயக்கன்பட்டி, அம்மாபேட்டை, பொன்னம்மா பேட்டை உள்ளிட்ட மாநகரப் பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் சாலை போக்குவரத்து மற்றும் ஆட்டோ சங்கத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சாலை போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் முருகேசன், பொருளாளர் மணி கண்டன், ஆட்டோ சங்கச் செயலாளர் உதயகுமார், பொரு ளாளர் மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.