districts

img

ஆட்டோ தொழிற்சங்க தலைவர் பி.கே.சுகுமாரன் மறைவு

கோவை, ஜன.15- கோவை மாவட்ட ஆட்டோ தொழிற்சங்க தலை வர் பி.கே.சுகுமாரன் சனி யன்று காலமானார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மேற்கு நகர முன் னாள் செயலாளரும், கோவை மாவட்ட ஆட்டோ  தொழிற்சங்க கூட்டமைப் பின் தலைவரும், சிஐடியு ஆட்டோ தொழி லாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரு மான பி.கே.சுகுமாரன் சனியன்று காலமா னார். இவரின் மறைவை அறிந்து மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற  உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு  உறுப்பினர்கள் வி.இராமூர்த்தி, ஏ.ராதிகா மற்றும் சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்ம நாபன், மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள் ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் அவரது உட லுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், கோவை பூ மார்க்கெட் பகுதியிலுள்ள ஆட்டோ சங்க அலுவலகத்தில் இரங்கல்  கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்டோ  தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு  தங்களது அஞ்சலியை செலுத்தினர்.  இதைத்தொடர்ந்து பாப்பநாயக்கன் பாளையத்திலுள்ள மின் மயமானத்தில் தோழரது உடல் தகனம் செய்யப்பட்டது.