நாமக்கல், பிப்.10- நாமக்கல் புத்தகத் திருவிழாவில், திருநங்கைகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாமக்கல் மாநகராட்சி, பரமத்தி சாலை, கொங்கு வேளா ளர் திருமண மண்டபத்தில் ஞாயிறன்று, 3 ஆம் ஆண்டு நாமக்கல் புத்தகத் திருவிழாவில் 9 ஆம் நாள் நிகழ்ச்சி, மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச் சர் மா.மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் 43 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தொடர்ந்து, 9 திருநங்கைகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் இல வச வீட்டுமனை பட்டா, 5 பயனாளிகளுக்கு ரூ.24,725 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள், 3 திருநங்கை களுக்கு அடையாள அட்டை, 2 திருநங்கைகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் கடனுதவி, தட்டாங்குட்டை பகுதியில் வசிக்கும் 4 திருநங்கைகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் குடி நீர் வசதி மற்றும் தெரு விளக்கு வசதி, திருநங்கை ஆர்த்த்திக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்பில் ஆட்டோ வாங்குதற்கு மானியம் ஆகியவை வழங்கப்பட்டன. இதையடுத்து ஆர்த்தியின் ஆட்டோவில் முதல் சவாரியாக அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.,க்கள் திருச்சி சிவா, ராஜேஷ்குமார் ஆகியோர் பய ணித்தனர்.