தாராபுரம், ஏப்.3 - காலை சிற்றுண்டியை சத்துணவு திட்டத் துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்து ணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் கே.விஜயராணி தலைமை யில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர் ஆர்.நிர்மலா, மாவட்டத் துணை தலைவர் ஆறுமுகம் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது தமி ழக முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்தோடு இணைத்து சத்து ணவு மையங்கள் மூலமாக சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்பவேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர் களுக்கு பணிக்கொடையாக அமைப்பாளர்க ளுக்கு ரூ. 5 லட்சமாகவும், சமையல் உதவியா ளர்களுக்கு ரூ.3 லட்சமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். சிறப்பு கால முறை ஊதியத்தை நீக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட் டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்ட நிர்வாகி டி.மாசிலாமணி, அரசு ஊழி யர் சங்க வட்டக்கிளை செயலாளர் இல. தில்லையப்பன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் சு.சிவராசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொரு ளாளர் டி.ராஜலட்சுமி நன்றி தெரிவித்தார். தாராபுரம் அதேபோல், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஒன்றிய தலைவர் கே.ரத்தினம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் என். பத்மா, மாவட்ட இணைச்செயலாளர் ஜெயந்தி கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப் பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க வட்டக் கிளை தலைவர் கே.செந்தில்குமார், நிர்வாகி மணிமொழி மற்றும் சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் சந்திரலேகா, சுஜாதா, செல் வம், புஷ்பா, ஆனந்தி, வசந்தாமணி உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் மாரியம்மாள் நன்றி தெரிவித்தார்.