districts

ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி - போலீசார் விசாரணை

 ஈரோடு, மே 24- புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த  வங்கியின் அருகிலேயே ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட் டுள்ளது. இந்த மையத்தில் பணம் எடுப்பதற்கு, பணம் வைப் பதற்கு, வரவு-செலவு கணக்கை சரிபார்த்து, பதிவு செய்து கொள்ள என 3 இயந்திரங்கள் உள்ளன. மேலும், இந்த  மையத்தில் பாதுகாப்பு பணிக்காக கண்காணிப்பு கேமராக்க ளும், கொள்ளை நடக்கும்போது உஷார்படுத்த எச்சரிக்கை மணியும் பொருத்தப்பட்டுள்ளது. கொள்ளையடிப்பதற்காக மர்ம மனிதர்கள் யாராவது ஏ.டி.எம். இயந்திரத்தை சேதப்ப டுத்தினால் உடனே எச்சரிக்கை மணி ஒலிக்கும். மேலும்,  புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கும், வங்கியின் மேலாளரின் செல்போனுக்கும் குறுஞ்செய்தி செல்லும். இதனால், ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முற்பட்ட போது, எச்சரிக்கை மணி ஒலித்த்தால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.