திருப்பூர், அக். 29 - பல்லடம் அருகே புளியம்பட்டி யில் பேருந்து வசதிக்கோரி பொது மக்கள் சாலை மறியல் செய்ய முயன் றனர். தகவல் அறிந்து வந்த காவல்து றையினர் போக்குவரத்து அதி காரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். இதில் நவம்பர் 7ஆம் தேதிக்குள் பேருந்து வசதி ஏற் படுத்தி தருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதி அளித்த னர். பல்லடம் வட்டம் புளியம்பட்டி கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்திலிருந்து, அருகில் இருக்கிற கரடிவாவி அரசு பள்ளிக்கு 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினந் தோறும் சென்று வருகிறார்கள். இவர் கள் பள்ளி நேரத்திற்கு செல் வதற்கும், திரும்பி வருவதற்கும் போக்குவரத்து வசதி என்பது அறவே கிடையாது. தனியார் வாகனங்களில் குழந்தைகளை அனுப்பக்கூடிய சூழ்நிலை உள்ளது. தனியார் வாகனங்களில் மாத கட்ட ணமாக ரூபாய் ஆயிரம் வரை வசூ லிக்கப்படுகிற நிலையில், புளியம் பட்டி பகுதியில் சாதாரண கூலி வேலைக்கு சென்று வரக்கூடிய மக் கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப் புவதற்கு மிகவும் சிரமப்படுகின்ற னர். எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புளியம்பட்டி கிளையின் சார் பாக கடந்த ஜூலை மாதம் போக்கு வரத்து அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் பேருந்து வசதி செய்து தர கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சூலூரில் இருந்து இயக்கப்படக் கூடிய 105 ஏ, 105 சி பேருந்தை புளி யம்பட்டி வரையில் நீட்டித்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டது.
தொடர்ச்சியாக கோரிக்கை மனுக்கள் கொடுத்துவந்த சூழ்நிலை யில்,கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் கோவை மண்டல மேலாளரிடம் பேருந்தை இயக்க வலியுறுத்தினார். செய்தி துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ. சாமிநாதனும் புளியம்பட்டிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தினார். எனினும் பேருந்தை இயக்க இது நாள் வரை எவ்வித நடவடிக்கை யும் எடுக்காத சூழலில், ஊர் பொது மக்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என திட்ட மிட்டு சனிக்கிழமை காலை சாலை மறியல் நடத்துவதற்கு திரண்டனர். இந்நிலையில், காமநாயக்கன்பா ளையம் காவல்துறையினர், போக்கு வரத்து அதிகாரிகளோடு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். பல்லடம் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக பணிமனையில் கிளை மேலாளர் உடன் நடந்த பேச்சு வார்த் தையில் வரக்கூடிய நவம்பர் 7ஆம் தேதிக்குள் 105 சி பேருந்தை புளியம்பட்டி வரை நீட்டித்து தருவ தற்கான ஏற்பாடுகளை செய்து தரு கிறோம் என உத்தரவாதம் அளித்த னர். இதையடுத்து சாலை மறியல் செய்யும் முடிவு கைவிடப்பட்டது. இதில், புளியம்பட்டி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செய லாளர் மணி, வெள்ளிங்கிரி கட்சியின் இடைக் குழு உறுப்பினர்கள் கே.வி. சுப்பிரமணியம், முருகசாமி, பி.ஆர். ராஜேந்திரன், கட்சியின் ஒன்றிய செய லாளர் ஆர்.பரமசிவம், புளியம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் உத்தமராசு ஆகியோர் பங்கேற்றனர்.