districts

img

ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளையிட முயற்சி: திருப்பூரில் பாஜக நிர்வாகி கைது

திருப்பூர், ஜூலை 29- திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தி பணத்தை கொள்ளை யிட முயற்சி செய்த பாஜகவின் திருப்பூர் மாவட்டப் பிரச்சார அணி செயலாளர் முருகானந்தம் ஞாயி றன்று கைது செய்யப்பட்டார்.  திருப்பூர் மாநகரம் அனுப்பர்பா ளையம் காவல் நிலைய எல்லைக்குட் பட்ட ஸ்ரீநகர் மெயின் வீதி, துரை காம்ப்ளக்சில் ஏடிஎம் அறை இருக்கி றது. இங்குள்ள ஏடிஎம் இயந்தி ரத்தை கடந்த ஜூலை 20ஆம் தேதி யன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஹாலோபிளாக் கல்லைக் கொண்டு உடைத்து சேதப்படுத்தி யுள்ளார். இதில் ரூ.55 ஆயிரம் மதிப் புள்ள ஏடிஎம் இயந்திரம் சேதப்படுத் தப்பட்டது. இந்த இயந்திரத்தில் பணத்தைத் திருட அந்த மர்மநபர் முயற்சி செய்திருக்கிறார். எனினும் முடியாததால் தப்பிச் சென்று விட்டார். இதுதொடர்பாக அனுப்பர்பா ளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து இந்த குற்ற சம்பவத் தில் ஈடுபட்டவரை காவலர்கள் தேடி வந்தனர். இந்நிலையில், பல்வேறு சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த தன் மூலம் இந்த குற்ற சம்பவத் தில் ஈடுபட்டது திருப்பூர் அவிநாசிக வுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வரும், பாஜக கட்சியின் திருப்பூர் மாவட்டப் பிரச்சார அணி செயலாளர் முருகானந்தம் (54) என்பது தெரியவந்தது. இதைய டுத்து, ஞாயிறன்று முருகானந்தத்தை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாஜக மாவட்ட நிர்வாகி வங்கி ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடு பட்டு கைது செய்யப்பட்ட தகவல் சமூக வலைதளத்தில் மிக வேக மாகப் பரவியது. குற்றவாளி முருகா னந்தத்துடன், பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலை நெருக்கமாக தோளில் கை போட்டிருப்பது போன்ற படம் மின்னல் போல் பரவியுள்ளது. இந்த நிலையில் பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்வேல் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதில் முருகா னந்தம் திமுகவில் இருந்து வந்தவர். அவர் அடிக்கடி தவறான செயலில் ஈடுபட்டதால் எச்சரித்ததாகவும், அவர் திமுக சீலிப்பர் செல்லாக செயல்படுவதாக தெரிந்ததால் பாஜ கவை விட்டு நீக்கப்பட்டு விட்டதா கவும் கூறியிருக்கிறார். ஆனால் முருகானந்தம் வசிக்கும் அவிநாசிகவுண்டம்பாளையம் பகுதி யில் விசாரித்தபோது, அவர் பாஜகவி லேயே தொடர்ந்து இருந்து வந்ததாக வும், அப்பகுதியில் உள்ள பாஜக கிளை அலுவலகத்தில் முருகா னந்தம் உள்ளிட்ட பலர் கஞ்சா போதை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபடக்கூ டியவர்கள் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். பாஜக நிர்வாகி ஆதாரத்துடன் சிக்கியிருக்கும் நிலையில் திமுக மீது பழிபோட்டு தப்புவதற்கு முயற்சி செய்வதாகவும், ஆனால் குற்றவாளி களின் கூடாரமாக பாஜக இருப்பதை  எந்த திரைபோட்டும் மறைக்க முடி யாது என்றும் அப்பகுதி மக்கள் கூறினர்.