districts

img

பாஜக பிரமுகரின் கஞ்சா விற்பனையை தடுத்த வாலிபர் சங்க தலைவர் மீது தாக்குதல் - ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 16- பாஜக பிரமுகரின் கஞ்சா விற்ப னையை தட்டி கேட்ட வாலிபர் சங்க  தலைவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பாஜகவினரை கைது செய்யக்கோரி பரவலாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருச்சி மாநகர், காட்டூர் பகுதி  குழு அம்மாக்குளம் வாலிபர் சங்க  கிளை செயலாளர் தவ்பிக். இவர்  அப்பகுதியில் உள்ள மக்கள் பிரச்ச னைகள், மக்கள் இயக்கங்களுக் காக பல போராட்டங்களில் ஈடுபட்டு  வருகிறார். இந்நிலையில், பாஜக பிரமுகர் வினோத் உள்ளிட்ட சிலர்  கஞ்சா விற்பனை செய்து வந்துள் ளனர். இதனை தட்டிக் கேட்ட தவ்பிக் மீது கொலை வெறி தாக்கு தல் நடைபெற்று உள்ளது. இந்த  தாக்குதலில் ஈடுபட்ட பாஜக பிர முகர் வினோத் உட்பட பதினைந்து பேரை உடனடியாக கைது செய்ய  வேண்டும். தமிழ்நாட்டு இளைஞர் களை சீரழிக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் விற்ப னையை உடனடியாக தடுத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியுறுத்தி இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் மாவட்ட தலைவர் வி.ஜெகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட பொரு ளாளர் வழக்கறிஞர் வெற்றிவேல்,  வடக்கு மாநகர செயலாளர் குரு பிரசன்னா, செயலாளர் விமல் குமார், சேலம் தாலுகா விஜி யேந்தர், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் எம்.குணசேகரன், மாவட்டத் தலைவர் ஹரி கிருஷ்ணன், சிபிஎம் மேற்கு  மாநகர செயலாளர் எம்.கனக ராஜ், வடக்கு மாநகர செயலாளர்  என்.பிரவீன்குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

ஈரோடு

திருச்சியில் வாலிபர் சங்க நிர்வாகி மீது நடத்தப்பட்ட கொலை  வெறி தாக்குதலைக் கண்டித்து ஈரோடு, சூரம்பட்டியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணை தலைவர் அன்பு ஜனாதிபதி  தலைமை ஏற்றார். இதில், மாவட்ட  செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன், சிறுபான்மை மக்கள் நலக் குழு வின். மாநில துணை தலைவர் ப. மாரிமுத்து, மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பா.லலிதா மற்றும் பவானி தாலுகா செய லாளர் கோபாலகண்ணன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். திர ளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து  கொண்டனர். 

நாமக்கல்

இதேபோன்று நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே, இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம்  சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்  வெள்ளி யன்று நடைபெற்றது. வாலிபர் சங்க  மாவட்ட தலைவர் லட்சுமணன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாவட்ட செய லாளர் மணிகண்டன்,   ஒன்றிய செய லாளர் நவீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கௌசல்யா, ஒன்றிய  துணை துணைச் செயலாளர் ஜெகதீஸ் மற்றும் திரளானோர் பங் கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.  இதேபோன்று, வெப்படை வடக்கு ஒன்றியம் சார்பில் வெப் படை பேருந்து நிறுத்த பகுதி  அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு வடக்கு ஒன்றிய செய லாளர் ராஜ் தேவ் தலைமையில், ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.