கிராமசபையில் கேள்வி எழுப்பியவர் மீது தாக்குதல்
சேலம், பிப்.14- புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் வகுப்பறைகள் இல்லாதது குறித்து, கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பியவரை தாக்கியதாக, பாதிக்கப்பட்டவர் சேலம் காவல் கண்காணிப் பாளரிடம் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வனவாசி அருகில் உள்ள சாணாரப் பட்டி மூலக்காடு அரசு நடுநிலைப்பள்ளி கடந்த 2021 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், தற்போது வரை அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கல்வி பயின்று வரு கின்றனர். இது குறித்து, குடியரசு தினத்தன்று, சாணாரப்பட்டி ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டத்தில் ராஜ்குமார் என்பவர் கேள்வி கேட்டுள்ளார். மேலும், சாணாரப்பட்டியில் உள்ள புறம்போக்கு நிலத்தை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தனது பெயருக்கு மாற்ற நினைப்பதாகவும் புகார் தெரி வித்துள்ளார். இதனால், எரிச்சல் அடைந்த சம்பந்தப்பட்ட பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனி சாமி என்பவர் 50க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் வந்து தன்னை தாக்கியதாக ராஜ்குமார் சேலம் மாவட்ட எஸ்பி யிடம் புகார் அளித்தனர். மேலும், பேச்சு வார்த்தைக்கு அழைத்து கொலை செய்வ தாக மிரட்டி உள்ளார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனிசாமிக்கு, கோபால் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து, நங்கவள்ளி காவல் நிலை யத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். 364/1 சர்வே எண் கொண்ட மந்தைவெளி புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொட்டகை அமைத்த பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனிசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
சிலிண்டர் கசிவு - பொதுமக்களுக்கு மூச்சு திணறல்
மேட்டுப்பாளையம், பிப்.14- தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் சிலிண்டர் கசிவு காரணமாக பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. பின்னர் அங்குள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்து 33 வார்டு பகுதி மக்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சுத்திகரிப்பு செய்யும் போது தண்ணீரினை சுத்தம் செய்ய குளோரின் சரியான விகிதத்தில் நகராட்சி ஊழியர்களால் கலக்கப்படும். இந்நிலையில், தண்ணீர் சுத்திகரிப்பு செய்ய குளோரின் சிலிண்டரை அங்குள்ள ஊழியர்கள் திறந்தனர். அப்போது அது பயங்கர சத்தத்துடன் வெடித்து குளோரின் கசிவு ஏற் பட்டது. இதனால் அங்கு குடியிருக்கும் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. சிலர் மயக்கம் அடைந்தனர். இதனிடையே, இச்சம்பவத்தை அறிந்த அந்த பகுதி மக்கள் சுத்திகரிப்பு நிலையம் முன்பு திடீரென ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குளோரின் சிலிண்டரில் அடிக்கடி சிறிய அளவில் கசிவு ஏற்பட்டு வந்தது. தற்போது அது பெரிய அளவில் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். நகராட்சி ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகர ணங்கள் கூட வழங்கவில்லை என குற்றம்சாட்டினர். இதனை யடுத்து மயக்கம் அடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கசிவினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இன்று மின் தடை'
கோவை, பிப். 14- கோவை மாவட்டத்தில் இன்று (பிப்.15) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது. மின் தடை ஏற்படும் பகுதி கள்: கீரணத்தம், சகாரா, அலைன்ஸ்மால் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட, கீரணத்தம், வரதையங்கார் பாளையம், இடிகரை, அத்தி பாளையம், சரவணம்பட்டி (ஒருபகுதி), விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி ஒருபகுதி, சிவானந்தபுரம், சத்தி ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதம் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தல்
தருமபுரி, பிப்.14- தருமபுரி மாவட்டத்தில் வன விலங்குகளால் பயிர்கள் சேதம் ஏற் பட்டுள்ளதால், நஷ்டஈடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில், மாவட்ட செயலாளர் சோ.அருச்சுணன் விடுத்துள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது, தருமபுரி மாவட் டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக யானை, காட்டுபன்றி உள்ளிட்ட வன விலங்குகளால், விவசாய பயிர்கள் பெரும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக பென்னாகரம், பாப் பாரப்பட்டி, பாலக்கோடு பகுதிகளில் கரும்பு, நெல், ராகி, வாழை, தக்காளி ஆகிய பயிர்களை சேதப்படுத்தி யுள்ளது. இதேபோன்று நல்லம் பள்ளி, அரூர் பாப்பிரெட்பட்டி சிட்லிங் ஆகிய பகுதிகளில் விலங்குகள் விவ சாய பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் ஏற்பட் டுள்ளது. எனவே, வன எல்லை பகுதி களில் வனவிலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க கம்பி வேலி அமைத்து வனத் துறையினர் கண்காணிக்க வேண் டும். வனவிலங்குகளால் பயிர் சேத மடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வா கமும் வனத்துறையும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மேலும், பென்னா கரம் வட்டம் எர்ரப்பட்டி ஊராட்சி அனுமந்தராயன் கோம்பை பகுதி யில் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேல் விவசாயம் செய்து குடியி ருந்து வருகின்றனர். இவர்கள் முறையாக நிலவரி செலுத்தி வரு கின்றனர். பல தலைமுறைகளாக வசித்துவரும் இம்மக்களை வனத் துறையினர் வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர். பல தலைமுறை களாக அனுபவித்து வரும் இம் மக்களுக்கு அந்த நிலத்தை உடமை யாக்கவேண்டும். வனத்துறையினர் இம்மக்களை வெளியேற்றும் முயற்சியை கைவிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ரூ. 67 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள்
தாராபுரம், பிப்.14- தாராபுரம் நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 67 லட்சத்து 30 ஆயி ரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ள தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் ஒதுக்கியுள்ளார். அந்த நிதியில் தாராபுரம் நகராட்சி பகுதிக்கு புதிய மழைநீர் வடிகால், சிமெண்டு சாலை அமைத்தல், சாக்கடை கால்வாய் கட்டுதல், குடிநீர் ஆழ்துளை குழாய் கிணறு ஆகிய பணிகளுக் கான தொடக்கவிழா நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் தலை மையில் நடைபெற்றது. விழாவில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விசைத்தறி, பஞ்சாலை சங்கங்கள் சார்பில் தெருமுனை பிரச்சார இயக்கம்
அவிநாசி,பிப்.14 - அவிநாசி அருகே வஞ்சிபாளையம் பகுதியில் சிஐடியு விசைத்தறி, பஞ் சாலை சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பஞ்சாலை, விசைத்தறி தொழிலா ளர்களுக்கு எட்டு மணி நேர வேலைக்கு மாத ஊதியம் ரூ.26,000 வழங்க வேண் டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும், அனைத்து என்டிசி தேசிய பஞ்சாலைகளையும் உடனடியாக இயக்க வேண்டும், நீண்ட காலமாக நிலு வையில் உள்ள பஞ்சாலைத் தொழிலா ளர்கள் ஊதிய உயர்வு பிரச்சனையில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அகில இந்திய பஞ் சாலை மற்றும் விசைத்தறி தொழிலா ளர் சங்கம் சார்பில் அவிநாசி ஒன்றியத் துக்கு உட்பட்ட வஞ்சிபாளையம் மற் றும் கருணைபாளையம் உள்ளிட்ட இடங்களில் தெருமுனை பிரச்சார இயக் கம் நடைபெற்றது. வஞ்சிபாளையம் பகுதியில் விசைத் தறி தொழிலாளர் சம்மேளனம் மாநில பொதுச் செயலாளர் எம்.சந்திரன், மாநி லத் தலைவர் பி.முத்துசாமி, விசைத் தறி தொழிலாளர் சங்க மாவட்ட தலை வர் வேலுச்சாமி, மாவட்ட நிர்வாகிகள் மோகனசுந்தரம், குப்புசாமி மற்றும் ராஜா உட்பட பலர் கலந்து கொண்ட னர். அதேபோல் கருணைபாளையத் தில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே. ரங்கராஜ், விசைத்தறி தொழிலாளர் சம் மேளனம் மாநிலத் தலைவர் பி.முத்து சாமி, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் மோகனசுந்தரம், பழனிச்சாமி, முருகன், சாமியப்பன், பஞ்சாலை சங்க நிர்வாகி சண்முகம், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ராஜன், மற்றும் முத்துராயப்பன் உட் பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண் டனர்.
ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப்பணி துறையினர் தயக்கம்?
அவிநாசி, பிப்.14- அவிநாசி அருகே தாமரைக் குளம் ஏரி மேட்டில் ஆக்கிர மிப்பு செய்து கட்டப்பட்ட சிவபுரம் சைவ மகா அறக்கட்டளை கட்டிடங்களை அகற்ற பொதுப்பணித்துறை தயக்கம் காட்டுவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவிநாசி ஒன்றியம், மங்கலம் சாலையில் சுமார் 180 ஏக்கர் பரப்பளவில் தாமரை குளம் அமைந்துள்ளது. இதில், பொது மக்கள் கன்னிமார் மற்றும் விநாயகர் சிலைகளை வைத்து வழி பட்டு வந்தனர். சிவபுரம் சைவ மகா அறக்கட்டளை என்ற பெய ரில் சிலர் கன்னிமார், விநாயகர் சிலை வைத்த இடத்தின் அருகே, சிவன் சிலை, அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை வைத்தனர். இதைத் தொடர்ந்து, புதிய சிலை மற்றும் பழைய சிலைகளுடன் சேர்த்து, மிகப்பெரிய கூடாரம் அமைத்து, கதவுகளுடன் கூடிய மதில் சுவர்கள் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக உணவு கூடாரம் அமைப்பதற்கு தகர கொட்டகை அமைக்க முயற்சி நடந்தபோது, அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அலுவ லர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, பொதுப்பணி துறை யினர் ஆய்வு மேற்கொண்டு இரண்டு நாட்களில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என கூறிவிட்டு சென்றனர். இந்த நிலையில் மீண்டும் சிலை வைப்பதற்காக, மரத்தை வெட்டி யுள்ளனர். இதனைத் தொடர்ந்து சனியன்று பொதுப்பணித் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நோட்டீஸ் ஒட்டியுள் ளனர். இதையும் அவர்கள் தரப்பைச் சேர்ந்த சிலர் கிழித்தெ றிந்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்ட போது, ஆக்கிரமிப்பு செய்துள்ள சுவரை பொதுப்பணித்து றைக்கு எழுதிக் கொடுத்துள்ளனர். அதேபோல் ஒரு சில ஆக்கி ரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது என் றார். இதையடுத்து சுவரை இடிப்பீர்களா என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று நாட்களில் செய்ய வேண்டும். ஆனால் சுவரை பொதுப்பணிதுறைக்கு எழுதிக் கொடுத்து விட்டார்கள் எனக் கூறினார். இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் குளம் அருகில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்த தீர்ப்பு கொடுத்துள் ளது. அவர்களும் வீட்டை எழுதிக் கொடுத்துவிட்டால் அப்பு றப்படுத்தாமல் விட்டு விடுவீர்களா என்று கேட்டதற்கு, தற் பொழுது கூட மாவட்டத்தில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு வீடு களை எடுத்து வருகிறோம், இதனையும் எடுப்போம் என கூறினார். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுப்பணித் துறையினர் ஆக்கிரமிப்புகளை பிப்.14 ஆம் தேதி அப்புறப் படுத்துவதாக கூறினார்கள். ஆனால் தற்பொழுது தயக்கம் காட்டுகிறார்கள். சாமானிய மக்களுக்கு ஒரு நியாயம். மத நோக்கத்துடன் செயல்படும் அறக்கட்டளைக்கு ஒரு நியா யமா? பொதுமக்கள் வீட்டை எளிதில் அப்புறப்படுத்தி விடுகின் றனர். ஆனால் அறக்கட்டளை ஆக்கிரமிப்பை அகற்றுவ தற்கு தயக்கம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பினர். மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
ரவுடி கும்பல் ஒழிப்பு திட்டம்
கோவை, பிப்.14- கோவையில் ஒரே நாளில் 10 ரவுடிகள் போலீசாரல் கைது செய்யப்பட்டனர். ரவுடி கும்பல் ஒழிப்பு திட்டம் மேற்கொள்ள இருப்பதாக கோவை மாநகர காவல் ஆணையர் வி.பால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மாநகரில் சமீபத்தில் இரு இளைஞர்கள் படு கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர். இதுகுறித்து மாநகர காவல் துறை ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் கூறு கையில், கோவை மாநகரில் 2 நாட்கள் நடந்தகொலை சம்ப வத்தில் ரவுடிகள் கும்பல் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. கோவை மாநகரில் 6 ரவுடிகள் கும்பல் செயல்பட்டு வருகிறது. மாநகர் முழுவதும் மொத்தம் 153 ரவுடிகள் இருப்பது பட்டியல் இடப்பட்டுள்ளது. இந்நிலையில், ரவுடி கும்பல் ஒழிப்பு திட் டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். அதன்படி மாநகரில் உள்ள ரவுடிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்கா ணித்து வருகிறோம். அவர்களில் யாராவது தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதற்கட்டமாக திங்களன்று ரத்தினபுரி எல்லைக்குட் பட்ட பகுதிகளில் மட்டும் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள் ளனர். இந்த நடவடிக்கை தொடரும். ரவுடிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, ரவுடிகள் இல்லா நகரமாக மாற்ற நடவ டிக்கை எடுக்கப்படும். மேலும், திருவண்ணாமலையில் 4 ஏடி எம்களில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதைய டுத்து, கோவை மாநகரில் 444 ஏடிஎம்-கள் உள்ளன. இந்த பகுதிகளில் இரவு முழுவதும் ரோந்து பணியில் போலீசார் ஈடு பட்டு வருகின்றனர், என்றனர்.
தீ விபத்தில் 30 கால்நடைகள் உயிரிழப்பு
அன்னூர், பிப்.14- அன்னூர் அருகே மாட்டுப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 30 கால்நடைகள் கருகி பலியான சம்பவம் அப்பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள செட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது தோட்டத்தை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் குத்தகைக்கு எடுத்து, அதில் ஆடு, மாடுகளை வைத்து பண்ணை நடத்தி வந்தார். இந்நிலையில், செவ்வா யன்று அருகிலிலுள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ காற்றின் வேகம் காரணமாக இந்த பண்ணைக்கும் பரவியுள்ளது. இந்த தீ விபத்தில் பண்ணை எரிந்து முற்றிலும் சேதமானது. இவ் விபத்தில் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த ஒரு சில மாடு கள் அவிழ்த்து விடப்பட்டன. இச்சம்பவம் குறித்து தகவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னூர் தீயணைப்பு துறையி னர், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இவ்விபத்தில் 20 ஆடுகள், 3 மாடுகள் மற்றும் 7 கன்றுக்குட்டிகள் ஆகியவை பரிதாபமாக தீயில் கருகி உயிரி ழந்தன. இதையடுத்து வந்த அன்னூர் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட னர். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தில் 30 கால் நடைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கூடு ஏலம்
தருமபுரி, பிப்.14- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல் பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடு களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்த அங்காடிக்கு திங்களன்று 850 கிலோ பட் டுக்கூடுகள் வந்தன. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்ச மாக ரூ.771க்கும், குறைந்த பட்சமாக ரூ.679க்கும், சரா சரியாக ரூ.736.74க்கும் விற்ப னையானது. மொத்தம் ரூ.6 லட்சத்து 26 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் ஏலம் போனது.
வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்: கல்லூரி நிர்வாகம் விளக்கம்
சூலூர், பிப்.14- கல்லூரி மாணவர்கள், வடமாநில தொழிலாளர்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், கல்லூரி நிர்வாகம் தன் னிலை விளக்கம் அளித்துள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் ஆர்விஎஸ் தனியார் பாலிடெக்னிக் கல் லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல் லூரி விடுதியின் உணவகத்தில் ஏராள மான வட மாநில தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இந்நிலையில், திங்களன்று இரவு உணவு உட்கொள்ள வந்த மாணவர்கள் அசைவ உணவு அதிகமாக கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் கைகலப் பாக மாறிய நிலையில் விறகுக்காக பயன்படுத்தப்படும் கட்டைகளை எடுத் துக்கொண்டு இருதரப்பும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனை அங்கி ருந்த மாணவிகள் அதனை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். இதனை யடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் இரு தரப்பையும் சமாதான மும் செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். இந்நிலையில், மாணவிகள் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைர லாகியது. இதனிடையே, இந்த மோதல் குறித்து ஆர்விஎஸ் கல்லூரி நிர்வாகம் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளது. இதுகுறித்து பொறியியல் கல்லூரி முதல் வர் விஜயன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், திங்களன்று இரவு கல்லூரி விடுதி மாணவர்களுக்கு வடமாநில நபர்கள் உணவு பரிமாறிய போது அசைவ உணவு அதிகமாக வேண்டும்படி மாண வர்கள் கேட்டுள்ளனர். அவர்களுக்கு அந்த மொழி புரியாததன் காரணமாக இருவரிடமும் வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது. இதன் காரணமாக மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் கல்லூரி மாணவர் இருவருக்கும் வடமாநில தொழி லாளர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட் டது. சிறுகாயம் என்பதால் முதல் உதவி செய்யப்பட்டது. தற்போது கல்லூரி வழக் கம் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கி றது. பிரச்சனை எதுவும் நடைபெற வில்லை. பொதுமக்கள், பெற்றோர்கள் அச்சப்படத் தேவையில்லை, என்றார்.
வாலிபர் கொலை: இருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்
கோவை, பிப்.14- கோவை நீதிமன்றம் அருகே நடை பெற்ற கொலை வழக்கில் தேடப்ப டும் குற்றவாளிகள் 5 பேரை கோத் தகிரியில் வைத்து நீலகிரி போலீசார் கைது செய்த நிலையில், அவர்களை கோவைக்கு அழைத்து வரும் வழி யில் தப்பியோட முயற்சித்தபோது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்ததாக தகவல் வெளியாகி யுள்ளது. கோவை மாவட்ட நீதிமன்ற வளா கத்தின் பின்புற நுழைவு வாயிலில் கோபாலபுரம் பகுதி உள்ளது. இங்கு வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், தனியார் தங்கும் விடுதிகள், திரைப் பட விநியோகஸ்தர்கள் அலுவல கங்கள், ஹோட்டல்கள் உள்ளிட் டவை செயல்பட்டு வருகின்றன. திங் களன்று 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டியதில் கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் உயிரி ழந்தார். இதனைத்தொடர்ந்து குற்ற வாளிகள் 5 பேர் நீலகிரி மாவட்டத் தினுள் நுழைந்துள்ளதாக போலீசா ருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து குன்னூர் காட்டேரி பகுதி குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீலகிரி மாவட்ட போலீசார் வாகனத் தணிக் கையில் ஈடுபட்டனர். அதில் காட்டேரி பகுதியில் பேருந் துகள் மற்றும் இருசக்கர நான்கு சக் கர வாகனங்கள் லாரிகள் தீவிர சோத னைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது கோத்தகிரி காவல் நிலைய எல்லைக் குட்பட்ட கட்டப்பட்டு மற்றும் கோத்த கிரி மார்க்கெட் ரோட்டில் அதிவேக மாக வந்த பைக்குகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் நீதிமன் றம் அருகே நடந்த கொலை சம்பவத் தில் தொடர்புடைய ஹரி, பரணி சவுந் தர், கவுதம், அருண் குமார், ஜோசுவா தேவபிரியன் ஆகியோர் என்பதை தெரிந்து கொண்ட காவல் துறையி னர் ஐந்து நபர்களையும் கைது செய்த தாக தனிப்படை போலீசார் தெரி வித்துள்ளனர். இதனிடையே கைதிகளை அழைத்து வரும் வழியில் ஒரு கைதி தப்பியோடியதாகவும், அவரை போலீசார் துரத்திப்பிடிக்க முயற்சி செய்த போது 2 கைதிகள் மீது துப் பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரி விக்கின்றன. கவுதம், ஜோஷ்வா ஆகிய இருவருக்கு காலில் துப் பாக்கி துண்டு துளைத்ததால் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள் ளது. இருவரும் மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் மேல் சிகிச்சைக்காக கோவை அழைத்து வரப்படுகின்றனர்.
குளிர்பதன கிடங்கை எப்ப சார் திறப்பீங்க?
தருமபுரி, பிப்.14- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகர் பகுதியில் தக்காளி உள்ளிட்ட காய்கறி மற்றும் பழங்கள் ஆகிய அழுகும் தன்மை யுள்ள உணவு பொருட்களை பதப்படுத்த வேளாண்மை விற் பனை ஒழுங்கு மையத்தின் சார்பில் முதன்மை பதப்படுத்தும் நிலையம், வே- பிரிட்ஜ், 12 கடைகள், குளிர்பதன கிடங்கு, விற்பனைக்கூடம் உள்ளிட்டவை 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடம் கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. ஆனால், விவசாயி களுக்கு காய்கறி விற்பனை கடைகள், குளிர்பதன கிடங்கு உள்ளிட்டவைகளை முறையாக ஒதுக்கீடு செய்யாமல் அதி காரிகள் மெத்தன செயல்பாட்டால் அப்பகுதியானது புதர் மண்டியும், உபகரணங்கள் துருபிடித்தும் பயன்பாடின்றி காணப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகை, பணம் கொள்ளை
நாமக்கல், பிப்.14- குமாரபாளையம் ஆசிரி யர் காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45). ஜவுளி வியாபாரியான இவர் திங்க ளன்று இரவு தனது குடும்பத் தினருடன் வெளியே சென்று விட்டு, செவ்வாயன்று அதி காலை வீடு திரும்பினார். அப் போது வீட்டின் கதவு உடைக் கப்பட்டு, பீரோவிலிருந்த 120 பவுன் நகை மற்றும் ரூ.3 லட் சம் ஆகியவை மாயமாகி இருந்தது. இதுகுறித்து குமா ரபாளையம் காவல் நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.