தருமபுரி, பிப்.15- மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செய லாளர் மீது கொடூர தாக்குதல் நடத்தி, பொய் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்த காவல் துறையின் காட்டுத் தர்பாரை கண் டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வட்டம், தொட்டாரதஅள்ளி யைச் சேர்ந்தவர் பி.துரை. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவரது சகோதரர் பிரச் சனை காரணமாக மாரண்டஅள்ளி காவல் நிலையத்திற்கு சென்று, காவல் ஆய்வாளர் சுப்பிரமணியி டம் பேசியுள்ளார். அப்போது, எதிர் தரப்புக்கு ஆதரவாக காவல் ஆய் வாளர் சுப்பிரமணி, உதவி ஆய்வா ளர் ஜீவானந்தம், காவலர் சம்பத் ஆகிய மூவரும் சேர்ந்து, துரையின் சட்டையை கழற்றி கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் துரையின் கண் பகுதி காயமடைந் துள்ளது. மேலும், கட்டிவைத்து உதைத்ததில் உடல் முழுவதும் அடி பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, போலீ சாரை தாக்கியதாகக்கூறி துரை மீது பொய் வழக்கை தொடுத்து, சேலம் சிறையில் அடைக்கப்பட் டார். எனவே, மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் துரை மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும் பப்பெற வேண்டும். துரையை கடு மையாக தாக்கி மனித உரிமையை மீறிய, காவல் ஆய்வாளர் சுப்பிர மணி, உதவி ஆய்வாளர் ஜீவானந் தம், காவலர் சம்பத் ஆகிய மூவர் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கட்சியின் வட்டச் செயலாளர் டி.எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் மாவட் டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.நாகரா சன், வட்டக்குழு உறுப்பினர்கள் ஜி. நக்கீரன், என்.சந்திரசேகரன், வழக் குறிஞர் பி.கோவிந்தசாமி, சி.ராஜா ஜி.பாண்டியம்மாள், பி.முருகன், பி.காரல் மார்க்ஸ், ஏ.சமது, என்.வரதராஜன், சி.கோவிந்தராஜ் உட் பட பலர் கலந்து கொண்டனர். இப்பிரச்சனை குறித்து உரிய நடவ டிக்கை எடுக்கப்படாவிட்டால், பெரும் போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.