districts

சிபிஎம் தலைவர் மீது தாக்குதல்: அதிமுக கவுன்சிலர் அராஜகம்

சேலம், செப்.22- கோவிலைப் பூட்டி வைத்து மக் களின் வழிபாட்டிற்கு இடையூறாக இருந்த அதிமுக கவுன்சிலரின் நடவ டிக்கையை தட்டிக்கேட்ட சிபிஎம் சேலம் மாவட்டக்குழு உறுப்பினர் மீது, அதிமுக கவுன்சிலர் அடியாட் களை கொண்டு கடுமையாக தாக்கி யுள்ளார். சம்பவம் நடந்து பத்து  நாட்கள் ஆன பின்னும் நடவடிக்கை  எடுக்காததை கண்டித்து, சிபிஎம் போராட்ட அறிவிப்பை வெளியிட் டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது, சேலம் அயோத் தியபட்டினம் பேரூராட்சி, 11 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் அசோக் என்பவர், அங்குள்ள மாரியம்மன் கோவிலை பூட்டி அராஜகத்தில் ஈடு பட்டுள்ளார். இது அப்பகுதி மக்க ளுக்கு பெரும் இடையூறாக இருந்த  நிலையில், அதனை மார்க்சிஸ்ட் கட் சியின் சேலம் மாவட்டக்குழு உறுப் பினர் கந்தசாமி தட்டிக்கேட்டுள்ளார். இதனையடுத்து, சாவியை பொது இடத்தில் வைக்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 14 ஆம் தேதி யன்று பொதுமக்கள் ஊர் கூட்டத்தை  கூட்டியுள்ளனர். இதில், மார்க்சிஸ்ட்  கட்சியின் சேலம் மாவட்டக்குழு உறுப் பினர் கந்தசாமி உள்ளிட்டோர் பங் கேற்றுள்ளனர். அப்போது அங்கு வந்த அதிமுக கவுன்சிலர் அசோக்  மற்றும் செல்வம், வேலவன், பழனி யப்பன் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்த தோழர் கந்தசாமியை கண்  மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

முகத் தில் கடுமையாக அடிபட்டு மூக்குத் தண்டு விரிசல் ஏற்பட்டு, நான்கு பற் கள் உடைந்துள்ளது. கடும் தாக்குத லுக்கு உள்ளான கந்தசாமியை அங் குள்ள மக்கள் மீட்டு சேலம் அரசு மருத் துவமனைக்கு கொண்டு சேர்த்து  சிகிச்சை மேற்கொண்டார். ஏற்கனவே, அப்பகுதியில் தோழர் கந்தசாமி கவுன்சிலராக செயல்பட்டு  மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற் றவர். நீண்ட காலமாக அந்த கோவில் பராமரிப்பு குடும்பத்தைச் சேர்ந்தவ ரும் கூட. இந்நிலையில், தேர்தல் கால  வன்மத்தை கணக்கில் கொண்டு இந்த கொலைவெறி தாக்குதலை கவுன்சிலர் அசோக்கும் அடியாட் களும் நடத்தியுள்ளனர். இந்த கொடூர மான கொலை முயற்சியை நடவ டிக்கை மார்க்சிஸ்ட் கட்சி வன்மை யாக கண்டிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிமுக கவுன்சிலர் அசோக் மற்றும் அடியாட்களை கொலை முயற்சி வழக் கில் கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இச்சம்பவம் நடைபெற்று பத்து நாட் களை நெருங்கும் நிலையிலும், இது வரையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது  காவல்துறை எவ்விதமான நடவடிக் கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, அராஜகத்தனமாக செயல் பட்ட சமூக விரோதிகளை உடனடி யாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று அயோத் தியபட்டினம் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன போராட் டம் நடைபெறும் என தெரிவித்துள் ளார்.