districts

img

ஆத்துப்பாலம் மேம்பால பணிகள் 94 சதவிகிதம் நிறைவு

கோவை, நவ.24- கோவை மாவட்டத்தில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி  வரை மேம்பாலம் ரூ.121.82 கோடி மதிப் பீட்டில் அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம்  கோவை மாநகரில் திண்டுக்கல் - பெங் களூரு தேசிய நெடுஞ்சாலையான கரும்பு கடையில் ஆரம்பித்து, உக்கடம் மார்க்கெட் பகுதியில் முடிவடைகிறது. கரும்புக்கடை முதல் உக்கடம் சந்திப்பு வரையிலான 1,110  மீட்டர் நீளமுள்ள 4 வழி மேம்பாலம், உக்கடம்  ஒப்பணக்கார வீதி வரை 344.80 மீட்டர் நீள முள்ள இருவழி இறங்கு தளம் என மேம் பாலத்தின் மொத்த நீளம் 1454.80 மீட்டர்  நீளத்தில், கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின்  பணிகள் 94 சதவிகிதம் முடிவுற்றுள்ளன.  இதனிடையே உக்கடம் சி.எம்.சி காலனி  பகுதியில் நடைபெற்று வரும் இப்பாலப்பணி களை வியாழனன்று மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித் திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.