கோவை, ஜன.1- கோவை திருச்சி சாலையை சேர்ந்தவர் இளங்கோ (71). ஜோதிடர். இவர் கடந்த 30 ஆண்டுகளாக ஜாதக குறிப்புகள் அடங்கிய மென்பொருளை உருவாக்கி அவற்றை விற் பனை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட் களுக்கு முன்பு இவரது கம்ப்யூட்டர் மர்ம நபரால் ஹேக் செய்யப்பட்டது. இதன்காரணமாக கம்யூட்டரில் இருந்த ஜாதக குறிப்பு மென்பொருள் மற்றும் அனைத்து தகவல் களும் முற்றிலுமாக அழிந்துள்ளது. இதனால் இளங்கோ கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த இளங்கோ வெள்ளியன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.