districts

img

குறுங்கோள்கள் கண்டுபிடிப்பு: கோவை அரசுப்பள்ளி மாணவிகள் சாதனை

கோவை, மார்ச் 25- கோவை அரசு பள்ளி மாணவிகள்  குறுங் கோள்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ள னர். இந்த கண்டுபிடிப்பை நாசா அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. கோவை, திருச்சி மற்றும் தமிழ்நாடு வானியல் அமைப்பு, தமிழ்நாடு அறிவி யல் துறை ஆகியவை சார்பில் குறுங்கோள் கள் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவையை அடுத்த ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் பிர மீஷா, சுவேதா ஆகிய 2 பேரும் கடந்த ஜன வரி  28 ஆம் தேதி முதல் பிப்.22 ஆம் தேதி  வரை நடந்த குறுங்கோள் கண்டறியும் முகா மில் இணையதளம் மூலம் கலந்து கொண்ட னர். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவ னமான நாசா அங்கீகரித்து வழங்கிய கணினி செயலி மூலம் 2 குறுங்கோள்களை இந்த மாணவிகள் கண்டறிந்தனர். இதனை நாசா அமைப்பும் அங்கீகரித்துள்ளது.

இதன் படி, மாணவிகளின் பங்களிப்பை பாராட் டும் வகையில் விஞ்ஞான் பிரசார் மூலம் நாசாவால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து குறுங்கோள் கண்டு பிடித்த மாணவிகள் அதற்கான சான்றி தழை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் காட்டி வாழ்த்து பெற்றனர். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், அறிவியல் ஆசிரியை சாய்லட்சுமி, ஆசிரியர்கள் மங்கையர்கரசி, நாகராஜ், கீதா ஆகி யோர் உடனிருந்தனர். இதன்பின், குறுங் கோள்கள் இயக்கம் குறித்து  மாணவிகள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரி யர்கள் கூறுகையில், சூரிய குடும்பத்தில் சூரியன், 8 கோள்கள் மற்றும் அவற்றின் துணைக்கோள்கள் தவிர இன்னும் பல கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. இதன்படி செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையில் நிறைய பாறை போன்ற பொருட்கள் சூரியனை சுற்றி வரும். இவை ஆஸ்டிராய்டுகள் எனப்படும் குறுங்கோள்களாகும். பொதுவாக சுமார் 10 மீட்டர் அளவு உள்ள சிறிய கற்கள் அளவில் இருந்து பெரிய மலை போன்ற அளவிலும் இவை உள்ளன. இவை பூமியின் சுற்றுவட்ட பாதையில் குறுக்கி டும்போது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைகின்றன. சிறிய அளவில் இருக்கும் கோள்கள் காற்றில் உராய்ந்து தீப்பிடித்து எரிந்து காணாமல் போய்விடுகின்றன. ஆனால், அளவில் பெரிதாக இருக்கும் கோள்கள் பூமியில் விழுந்து பாதிப்பை ஏற் படுத்தி விடுகின்றன. கடந்த 1908 ஜூன் 30 ஆம் தேதி சைபீ ரீயாவை பெரிய குறுங்கோள் ஒன்று தாக்கி யதால் அந்த பகுதியில் கடும் பாதிப்பு  ஏற்பட்டது. இதன் நினைவாக ஆண்டு தோறும் ஜூன் 30 ஆம் தேதி குறுங்கோள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த குறுங் கோள்களுக்கு முதலில் ரோமானிய புராணப் பெயர்கள்தான் வைக்கப்பட்டன.

இந்தியாவில் முதலில் கண்டுபிடித்த கோளுக்கு ‘ஏசியா’ என்று பெயரி டப்பட்டது. தற்போது பெயர் வைக்கும் முறை கைவிடப்பட்டு அதற்கு பதிலாக ஒரு  அட்டவணை ஏற்படுத்தி எண் வரிசை தரப்படுகிறது. இதன்படி இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஸெரிஸ் துணைக்கோளுக்கு அட்டவணை எண் 1 என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதன்படி மாணவிகள் கண்டுபிடித்த குறுங் கோள்களுக்கு பி.ஜெ.யு.001, பி.ஜெ.யு.002 என்று பெயரிடப்பட்டு உள்ளது. குறுங்கோள்கள் குறித்து மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோடிக் கணக்கில் உள்ள இந்த குறுங்கோள் களை கண்டறியும் பணிகள் நாசா தலைமை யில் தீவிரமாக நடந்து வருகின்றன. குறுங் கோள்களை கண்டுபிடித்தால் அவற்றின் பயண வேகத்தை அறிந்து கொண்டு  பூமியை நோக்கி வந்தால் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள லாம். மேலும் குறுங்கோள்களில் உள்ள தாதுப்பொருட்களை கண்டுபிடித்து அவற் றையும் பூமிக்கு கொண்டு வரலாம். இவ் வாறு அவர்கள் கூறினர். இந்த மாணவிகள் ஏற்கனவே தேசிய திற னாய்வு தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ள னர். மேலும், எதிர்காலத்தில் வானியல் சம்பந்தமான படிப்புகள் படிக்க உள்ளதாக தெரிவித்தனர். மேலும் மாணவிகள் வேண்டுகோளுக்கிணங்க மாணவிகள் படிக்கும் பள்ளிக்கு தொலைநோக்கி வசதி ஏற்பாடு செய்வதாக ஆட்சியர் ஜி.எஸ்.சமீ ரன் உறுதியளித்தார்.