திருப்பூர், ஜூலை 26 - திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகளில் அவுட்சோர் சிங் விடப்பட்ட தூய்மைப் பணியில் வேலை செய்யும் தொழிலாளர்க ளுக்கு சம்பளக் குறைப்பு செய்யும் பிரச்சனையில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அர சாணைப்படி ஊதியம் வழங்க வேண் டும் என்று உதவி ஆணையர் வலியு றுத்தினார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, தாராபுரம், பல்லடம், காங் கேயம், வெள்ளகோவில், திருமுரு கன்பூண்டி ஆகிய ஆறு நகராட்சிக ளில் தூய்மைப் பணியை அயல் பணி (அவுட்சோர் சிங்) என தனியாருக்கு ஒப்படைத்ததற்கு பிறகு தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஏற்க னவே வழங்கப்பட்டு வந்த ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. நாளொன் றுக்கு சுமார் ரூபாய் 380 மட்டுமே வழங் கப்படுகிறது. தமிழக அரசு வெளியிட்டுள்ள குறைந்தபட்ச ஊதிய அரசாணை 2 (டி) 36 இன்படி மாவட்ட ஆட்சியர் நிர் ணயித்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.572, குடிநீர் பணியாளர்களுக்கு ரூ.648, ஓட்டுநர்க ளுக்கு ரூ.687 வீதம் தினசரி ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இந்த அரசாணைப்படி ஊதியம் வழங்கக் கோரி கடந்த வியாழனன்று சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலகத்தில் மண்டல இயக்குநர் இளங்கோவனி டம் சிஐடியு சார்பில் மனு கொடுத்து கோரிக்கையை வலியுறுத்தினர். குறிப்பாக தூய்மைப்பணி தனியா ரிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு பிறகு ஊதியக் குறைப்பு செய்யப்படுகி றது. ஊதியம் மற்றும் இஎஸ்ஐ பி.எப் பற்றிய விபரங்களை தெளிவாக சொல்ல ஒப்பந்ததாரர்கள் மறுக்கின் றனர். கடந்த ஒரு மாத காலத்தில் பல கட்ட போராட்டம் நடத்தியும் இப் பிரச் சனையில் தீர்வு காணப்படாமல் உள் ளது. எனவே அரசாணைப்படி உரிய ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இப்பிரச்சனையில் அரசாணைப்படி ஊதியம் வழங்கா விட்டால் ஆறு நகராட்சிகளில் தூய்மை பணியாளர்கள், வாகன ஓட் டுனர்கள், குடிநீர் பணியாளர்கள், டிபிசி கொசுப்புழு ஒழிப்பு பணியா ளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஜூலை 25ஆம் தேதி முதல் காலவரை யற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என சிஐ டியு அறிவித்தது. செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கு வதற்கான ஆயத்தப் பணிகளில் அனைத்து நகராட்சிகளிலும் சிஐடியு சங்கத்தினர் ஈடுபட்டனர்.
இந்நிலை யில் தூய்மைப் பணியாளர் சம்பளப் பிரச்சனை தொடர்பாக சிஐடியு சங்கத்தினர் மற்றும் நகராட்சி ஆணை யர்களை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்த திருப்பூர் மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணை யர் செந்தில்குமார் அழைப்பு விடுத் தார். அதன்படி 25ஆம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர கத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சட்டப்படி அர சாணையில் குறிப்பிட்டுள்ள ஊதி யத்தை நடைமுறைப்படுத்த வேண் டும் என்று சிஐடியு தரப்பில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், மாவட்டத் துணைத் தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன், சுப்பிரமணியம் எம்.சி., உள்ளிட்டோர் சார்பில் வலி யுறுத்தப்பட்டது. நகராட்சி ஆணையர்கள் தரப் பில், அயல் பணியாக தனியார் ஒப்பந் ததாரர்களிடம் விடப்பட்டுள்ள நிலை யில் அவர்கள்தான் ஊதியம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. எனினும் இந்த வாதத்தை ஏற் காத உதவி ஆணையர் செந்தில்கு மார், முதன்மை பணி வழங்கு வோர் என்ற முறையில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசாணைப்படி நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்குவதை உத்தர வாதப்படுத்த வேண்டும் என்று வலி யுறுத்தினார். இது குறித்து நிர்வாகத் தரப்பில் பேசி நடவடிக்கை எடுப்பதாக நக ராட்சி ஆணையர்கள் தெரிவித்துள்ள னர். எனினும் அரசாணைப்படி தொழி லாளர்களுக்கு ஊதியம் வழங்குவ தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறும் என்று கூறி இப்பேச்சுவார்த்தையை தொழிலாளர் துறை உதவி ஆணை யர் செந்தில்குமார் முடித்து வைத் தார்.