திருப்பூர், மே 14 - கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிய முழு அளவு ரேசன் பொருட்களை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்டக் கூட்டுறவு பணியாளர் சங் கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசின் தொழி லாளர் விரோதப் போக்கை கண் டித்தும், ரேசன் கடை ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு ரூ.50 லட்சம் வழங்க கோரியும், இலவசப் பொருட் களை 100 சதவிகிதம் வழங்க உறுதியளித்திடக் கோரியும் திருப்பூர் மாவட்டக் கூட்டுறவு பணியாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பாக திருப்பூர் அவிநாசி சாலையிலுள்ள சிஐடியு மாவட்டத் தலைமை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. திருப்பூர் மாவட்டத் தலைவர் மகேந்திரன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டு றவுப் பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி. கௌதமன், சிஐடியு பஞ்சாலைத் தொழிலாளர் சங்க நிர் வாகி கே. பழனிசாமி ஆகியோர் முன் னிலை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மேலும், மாவட்ட துணைத் தலைவர் சிவ குமார், மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ், நிர்வாகக் குழு உறுப்பினர் ராமு மற்றும் சங்க உறுப்பினர்கள் சோமு, பழனிசாமி, தீனதயாளன், சிவ காமி, மற்றும் தவமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.