districts

img

பெண் மீது தாக்குதல்: பாமக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தருமபுரி, செப்.1- பெண் மீது தாக்குதல் நடத்திய பாமக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம்,  பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட பெரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ் (45). இவரது மனைவி சகுந் தலா (40). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.  இவர்களுக்கு சொந்தமான பூர்வீக நிலம் ஒரு  ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவ சாயம் செய்து வருகின்றனர். இதே கிராமத் தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வரின் கணவரும், பாமக உழவர் பேரியக்கத்தின் மாவட்ட நிர்வாகியுமான அய்யப்பன் என்பவரின் நிலமும், முனிராஜின் நிலமும் அருகாமையில் உள்ளன. இந்நிலையில், கடந்த வெள்ளியன்று முனிராஜின் விவசாய நிலத்தில் அய்யப்பன் மாடு மேய்த்துள்ளார். இதனைப்பார்த்த சகுந்தலா,  “ஏன் எங்கள் நிலத்தில் மாடு மேயக்கிறீர்கள்” எனக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அய்யப்பன், பெண் என்றும் பாராமல் காலால்  சகுந்தலாவின் நெஞ்சுப் பகுதியில் உதைத்துள் ளார். இதனால் நிலைகுலைந்த சகுந்தலா மயங்கி கிழே விழந்துள்ளார். இதன்பின் மயக்க நிலையில் இருந்த சகுந்தலாவை மீட்டு, அவரது கணவர் முனி ராஜ் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதித்தார். இதுகுறித்து சகுந்தலா கூறுகையில், நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன், அய்யப்பன் எங்க ளது நிலத்தில் மாடு மேயக்கிறார். இதனை கேட் டால் ஆபாசமாக பேசுகிறார். இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் என்பதாலும், அரசி யல் கட்சியில் இருப்பதாலும் என்னை ஒன்றும்  செய்ய முடியாது என கூறுகிறார். இதனிடையே, வெள்ளியன்று என்னை கொலை செய்யும் நோக் கத்துடன் காலால் எட்டி உதைத்தார். மயங்கி நான்  விழுந்தவுடன் நான் இறந்துவிட்டதாக நினைத்து ஓடிவிட்டார், என்றார். திட்டமிட்டு தாக்கி அராஜக செயலில் ஈடுபட்ட அய்யப்பன் மீது வழக்குப்பதிவு  செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாப்பாரப் பட்டி பகுதிக்குழு வலியுறுத்தியுள்ளது.