ஈரோடு, டிச.18- அடிப்படை வசதிகள் கேட்டு மலைக் குறவர் மக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், நல்லகவுண்டன் பாளையம், கன்னிமார் காடு பகுதியில் மலைக்குறவ மக்கள் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்கும் நாள் கூட்டத்தில் அளித்துள்ள மனுவில் கூறி யிருப்பதாவது, நாங்கள் பவானி, லட் சுமி நகர், புறவழிச்சாலை பாலத்தின் கீழ் தங்கியிருந்தோம். மலைக்குறவர் இனத் தைச் சேர்ந்த நாங்கள் ஸ்டவ் அடுப்பு பழுது நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். பாலத்தின் கீழ் வசித்த போது, சாலை விபத்தினால் பாதிக்கப் பட்டோம். இதையடுத்து, கன்னிமார் காடு பகுதியில் அரசு இடம் ஒதுக்கி பட்டா வழங்கியது. அங்கு சிறிய அளவில் வீடு, குடிசை, ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைத் தும் வசித்து வருகிறோம். இப்பகுதியில் தெரு விளக்கு, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. குடியி ருப்பிற்கு அருகே ஒரு குடிநீர் குழாயில் உப்பு தண்ணீர் வரும். மிகக்குறைந்த நேரமே அந்தத் தண்ணீர் வருவதால், அதேபகுதியில் வசித்து வரும் பிற சமூ கத்தினரும் அங்கு தண்ணீர் பிடிக்க வரு வர். அவர்கள் எங்களை தண்ணீர் பிடிக்க விடாமல் தகராறு செய்கின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ளவர் கள், எங்களை இங்கு வரக்கூடாது. தண் ணீர் பிடிக்கக்கூடாது, என மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே, அப் பகுதியில் நாங்கள் வசிக்க உரிய பாது காப்பு வழங்க வேண்டும். மேலும், எங்க ளுக்கு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ் வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.