திருப்பூர், டிச.21- காங்கேயத்தில் அரசு வழங்கிய இலவச பட்டா நிலம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால், வாடகை வீட்டில் வசிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள் ளோம். எனவே ஆக்கிரமிக்கப்பட் டுள்ள நிலத்தை மீட்டுத் தரக்கோரி அப்பகுதி மக்கள் வட்டாட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து முற்றுகையில் ஈடு பட்ட பொதுமக்கள் கூறியதாவது, காங்கேயம் வட்டம், குண்டடம் ஒன்றி யம், வட்டமலை ஊராட்சிக்குட்பட்ட வடக்கு புதுப்பாளையம் கிராமம் அருகே அரசு கொடுத்த இலவச வீட் டுமனைப் பட்டா நிலத்தில் 15 குடும் பங்களைச் சேர்ந்தவர்கள் வீடுகட்டி குடியிருந்து வந்தோம். இந்நிலை யில், கடந்த 2013 ஆம் ஆண்டு அரசு வழங்கிய இலவச பட்டா நிலத்தை, தங்களது பட்டா நிலம் எனக் கூறி இதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துக்கொண்டனர். பின் னர், வீடுகள் இருந்த இடம் முழு வதும் கம்பி வேலி அமைத்து முழு மையாக ஆக்கிரமித்துக்கொண்ட னர். கடந்த 10 ஆண்டுகளாக அரசு வழங்கிய இடத்தை மீட்டுத்தரக் கோரி தொடர்ந்து போராடி வருகி றோம். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக ளில் நாங்கள் கட்டி குடியிருந்த வீடு கள், கோயில் உள்ளிட்டவற்றையும் இடித்து விட்டனர். இதனால், சொந்த வீட்டை இழந்து தற்போது காங்கே யம், முத்தூர், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வாடகைக்கு குடியிருந்து வருகிறோம். நாங்கள் மேற்கண்ட பகுதியில் குடியிருந்ததற் கான அரசு அடையாள ஆவணங்க ளான ஆதார் அட்டை, குடியிருப்புச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவையும் உள்ளன. எனவே, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் காங்கே யம் வருவாய் ஆய்வாளர் பேச்சு வார்த்தை நடத்தி, இதுகுறித்து உரிய ஆய்வு நடத்தப்படும் என உறுதிய ளித்ததைத் தொடர்ந்து போராட் டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பகு தியில் வருவாய் ஆய்வாளர் விதுர் வேந்தான் ஆய்வு செய்து கூறியதா வது, பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று சம்பந்தப்பட்ட இடத் தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வரு வாய்த் துறை ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து தொடர் நடவடிக்கை எடுக் கப்படும் என்றார்.