மேட்டுப்பாளையம், நவ.1 - மேட்டுபாளையம் சிறுமுகை டாஸ்மாக் மதுக்கடையின் மேற் பார்வையாளர் விற்பனை பணத்தை வங்கியில் கட்ட சென்ற போது வழியில் கத்தி முனையில் மிரட்டி பறிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தை அடுத்துள்ள சிறு முகை வெள்ளிகுப்பம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாள ராக பணிபுரிந்து வருபவர் விஜய் ஆனந்த். இவர் திங்களன்று மதியம் கடையில் விற்பனையான பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் மேட்டுப் பாளையம் இந்தியன் வங்கியில் செலுத்த ஆலாங்கொம்பு வழி யாக சென்றுள்ளார். அப்போது, அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத் தில் வந்த நபர்கள் அவர் மீது மோதுவது போல் வந்து கீழே விழச்செய்துள்ளனர். பின்னர் கீழே விழுந்தவுடன் இருசக்கர வாக னத்தில் வந்த வேறு இருவர் பட்டா கத்தியுடன் பாய்ந்து பணம் வைக் கப்பட்டுள்ள இருசக்கர வாக னத்தை பறிக்க முயன்றனர். இதனை பார்த்த அவ்வழியே சென் றவர்கள் அலறியடித்து ஓடினர். ஆனால், உள்ளூர் மக்கள் திரண்ட தால் வழிப்பறியர்கள் மேற்பார்வை யாளரை கொலை செய்து விடுவ தாக மிரட்டல் விட்டு தப்பிச்சென் றுள்ளனர். இதில், கையில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் முழுமையான வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங் களில் வைரலாகியுள்ளது. இதே போன்று கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதே விஜய் ஆனந்தை மேட்டுப்பாளையம் இந்தியன் வங்கி அருகிலேயே கத்தியால் குத்தி விட்டு பணம் பறிக்க முயன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத் தக்கது.
வருவாய் மட்டும்தான் நோக்கமா? - சிஐடியு கண்டனம்
இதுகுறித்து சிஐடியு டாஸ் மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், டாஸ்மாக் நிர்வா கத்திற்கு இந்நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் மட்டுமே இலக்காக இருக்கிறது. டாஸ்மாக் ஊழியர்களின் உயிர்களைப்பற்றி எந்த கவலையும் படுவதில்லை. தற்போது நடைபெற்ற தாக்கு தலில் சம்பந்தப்பட்ட மேற்பார்வை யாளர் இரண்டாவது முறையாக தாக்குதலுக்கு உள்ளாகி யுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே டாஸ்மாக் கடையின் அருகில் இருக்கும் மற்றொரு டாஸ்மாக் மதுக்கூட உரிமையா ளரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நரசிம்ம நாயக் கன்பாளையத்தில் டாஸ்மாக் ஊழியரை கடையின் அருகில் தாக் குதல் நடத்தி தலையில் ஆறு தையல் போடப்பட்டு மருத்துவ மனையில் கிடக்கிறார்.
இது ஏதோ ஒரு சம்பவம் அல்ல. தொடர்ந்து இதுபோன்று இலக்கு வைத்து டாஸ்மாக் ஊழியர்கள் தாக்கப்படு கிறார்கள். இவர்களின் உயிருக் கும், உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு வங்கிகளே நேரிடை யாக வந்து பணத்தை பெற வேண்டும் என்று தொடர்ந்து சிஐடியு டாஸ்மாக் சங்கம் கோரிக்கை வைத்து போராடி வரு கிறது. உடனடியாக தமிழக அரசு வங்கி நிர்வாகத்துடன் பேசி இதற்கு நல்ல தீர்வை ஏற்படுத்த வேண்டும். அதேநேரத்தில் சிறுமுகை டாஸ் மாக் மேற்பார்வையாளர் விஜய் ஆனந்த் தாக்கப்பட்ட சம்பவத்தில், போலீசார் ஒரே கோணத்தில் விசாரிப்பதாக தெரிகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இதே மேற்பார்வை யாளர் தாக்கப்பட்ட சம்பவத் திற்கு பிறகு கடந்த இரண்டு மாதங் களுக்கு மேலாக இவர் வங்கியில் பணத்தை செலுத்த செல்வ தில்லை. ஊழியர்களே பணத்தை கட்டுவதற்கு செல்கின்றனர். இந்த திங்கட்கிழமைதான் வங்கியில் பணத்தை செலுத்த சென்றுள் ளார். இதனையறிந்தே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள் ளதாக தெரிகிறது. இது வெறும் வழிப்பறி சார்ந்த நடவடிக்கையாக பார்க்காமல், இதன் பின்னனி குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் அனைவரும் கடுமையான பிரிவில் கைது செய்யப்பட வேண்டும். டாஸ்மாக் நிர்வாகம் இதற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களின் உயிரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உள்ளது என்பதை உணர்ந்து எதிர் காலத்தில் செயல்பட வேண்டும் என தெரிவித்தனர்.