தருமபுரி, ஜூலை 13- கர்நாடகா அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகே னக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயி ரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந் துள்ளது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகு திகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபிணி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேக மாக நிரம்பி வருகின்றன. இந்நிலை யில், கபிணி அணையிலிருந்து 5 ஆயிரம் கனஅடி, கிருஷ்ணராஜ சாகர் அணை யில் இருந்து 2 ஆயிரத்து 257 கனஅடி என மொத்தம் 7 ஆயிரத்து 257 கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட் டுள்ளது. இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சனியன்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக ஆர்ப்பரித்து காணப்பட்டது.