districts

img

அரூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்

தருமபுரி, ஜூலை 11- அரூர் பேரூராட்சியை, நகராட்சி யாக தரம் உயர்த்தப்படும் என தரும புரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு  விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட் டார். தருமபுரி மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல் வர் திட்டத்தை வியாழனன்று முதல் வர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்டம் சார்ந்த முக்கிய அறிவிப் புகளை வெளியிட்டு உரையாற்றி னார். இதில், ரூ.51 கோடி செலவில் அரூர் அரசு மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்ப டுத்தப்படும். கடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது கொடுத்த வாக்குறுதியான தரும புரி – வெண்ணம்பட்டி சாலையில்,  புதிய ரயில் மேம்பாலம் 38 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். மோபிரிபட்டி–தொட்டம்பட்டியை இணைத்து, “அரூர் பேரூராட்சி”, “அரூர் நகராட்சியாக” தரம் உயர்த்தப்படும்.  பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைக்கட்டுகள் ரூ.5 கோடியே  50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனர மைக்கப்படும். சிட்லிங், அரசநத்தம்  பகுதியில் பழங்குடியினர் உற்பத்தி  செய்யும் ராகி, சாமை, வரகு ஆகிய வற்றை மதிப்புக் கூட்டுப் பொரு ளாக்க கிடங்கு மற்றும் பொதுச்  செயலாக்க மையம் அமைக்கப்ப டும். தீர்த்தமலையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும். பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பழு தடைந்த நிலையில் இருக்கும் 4 வகுப்பறைகள், அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். தரும புரி ஒன்றியத்தில் உள்ள பெரிய பட்டி மற்றும் வெள்ளாளப்பட்டி ஊராட்சிகளில், ரூ.2.54 கோடி மதிப் பீட்டிலும், அரூர் ஒன்றியத்தில் சிட் லிங் கிராமம், அம்மாப்பேட்டை, மருதிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ.3.82 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.6 கோடியே 36 லட் சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடங் கள் கட்டப்படும்.  மொரப்பூர் மற்றும் அரூர் பகுதி களில் உள்ள தனியார் கட்டடங்க ளில் செயல்பட்டு வரும் 7 குழந்தை கள் மையங்களுக்கு புதிய கட்ட டம் கட்ட மையம் ஒன்றிற்கு தலா ரூ.16 இலட்சத்து 69 ஆயிரம் என  மொத்தமாக, ஒரு கோடியே 17 லட் சம் ரூபாய் செலவில் 7 புதிய கட் டடங்கள் கட்டப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.