districts

img

அருந்ததியர் சமூக அறக்கட்டளை கூட்டம்

அவிநாசி, மார்ச் 17- திருமண மண்டபக் கட்டடம் தொடர்பாக ஆ.ராசா எம்.பி.,யை நேரில் சந்திக்க அருந் ததியர் சமூக அறக்கட்டளை முடிவு செய் துள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா அருந்ததியர் சமூக அறக்கட்டளை ஆலோ சனைக்கூட்டம் தனியார் திருமண மண்டபத் தில் எம்.ஆர்.ரவிராஜ் தலைமையில் நடை பெற்றது. இதில் ஒன்றியக் கவுன்சிலர் அய் யாவு தெக்கலூர் மணி, துலுக்கமுத்தூர் பழனிச்சாமி, பழ.சண்முகம், லட்சுமணன் உட் பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத் தில், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். அவிநாசி புதிய பேருந்து நிலை யம் அருகே உள்ள 15 சென்ட் நிலத்திற்கு பட்டா  பெற வேண்டும். நீலகிரி நாடாளுமன்ற உறுப் பினர் ஆ.ராசாவிடம் திருமண மண்டபக் கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கூறு வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. மேலும், அருந்ததியர் சமூக குழந்தை கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவி கள் படிப்பதற்காக அனைத்து வித உதவி களையும் மேற்கொள்வது என்று ஆலோசிக் கப்பட்டது.