districts

அருந்ததிய மக்கள் குடியிருப்புப் பகுதிகளை அப்புறப்படுத்துவதை நிறுத்தி வீட்டுமனைப்பட்டா வழங்க கோரிக்கை

திருப்பூர், மார்ச் 8- சாமளாபுரம் கிராமத்தில்  நூறாண்டுகளுக்கு மேலாக குடியி ருந்து வரும் அருந்ததியர் மக்கள்  குடும்பங்களை அங்கிருந்து வெளி யேற்றக் கூடாது, அவர்களுக்கு உரிய இடம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.ரங்கராஜ், பல்லடம் ஒன்றி யச் செயலாளர் ஆர்.பரமசிவம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரகத் தில் செவ்வாயன்று அளித்த மனு வில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா சாமளாபுரம் கிராமத்தில் காசா எண்  445/1ஏ இடத்தில் கடந்த நூறு ஆண் டுகளுக்கும் மேலாக 160 குடும்பங் களாக சுமார் 800க்கும் மேற்பட்ட அருந்ததிய மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், தற் போது இந்த இடம் ஏரி புறம்போக்கு நிலம் என கூறி 20 நாட்களுக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என நீர்வளத் துறை சார்பில் நோட் டீஸ் தரப்பட்டுள்ளது. தலைமுறை தலைமுறையாக வசித்து வரக்கூடிய அந்த பகுதியில் பேரூராட்சி மூலமாக வீட்டு வரி, குடிநீர் இணைப்பு வரி, மின்  இணைப்பு அடிப்படை வசதிகள் என அனைத்தும் செய்து கொடுக்கப் பட்டுள்ளது. இந்த மக்களுக்கு வாக் காளர் அடையாள அட்டை, ரேஷன்  கார்டு, ஆதார் கார்டு என தொடர்ந்து  அந்த பகுதிகளில் உள்ளது. மேலும் 70, 80 ஆண்டுகளுக்கு முன் பாக இந்த பகுதி மக்களால் வெட்டப் பட்ட குடிநீர்  கிணற்றில் இருந்து தான் இப்பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இப்பகுதி மக்கள் அனைவரும் சாதாரண கூலித் தொழிலாளர்களா கவும், விசைத்தறி தொழிலாளிகளா கவும் வாழ்ந்து வருகிறார்கள்.

தன் னுடைய உழைப்பு முழுவதையும் செலுத்தி ஆர்சி வீடுகளாக, ஓட்டு வில்லை வீடுகளாக கட்டியுள்ளனர். தற்போது திடீரென இவர்களை காலி செய்யச் சொன்னால் இவர்களுடைய ஒட்டுமொத்த வாழ் வாதாரம் பாதிக்கப்படும். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு களை இடிக்காமல் வகை மாற்றம்  செய்து தர வேண்டும். தற்சமயம் அந்த குளம் சீரமைக்கப்பட்டு குடி யிருப்பைச் சுற்றி பெரிய அளவி லான ஏரி அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக ஒருமுறை கூட குளத்து தண்ணீர் வீடுகளுக்குள் வந்து பாதிப்பு ஏற்பட்டதில்லை. அங்கு குடியிருக்கும் மக்களின்  வேலைவாய்ப்பு என்பது அந்த பகு தியிலேயே உள்ளது. எனவே அம் மக்களுக்கு உதவக்கூடிய வகை யில் வகை மாற்றம்  செய்து அங் கேயே வீட்டுமனை பட்டா வழங்கி அப்பகுதி மக்களை குடியமர்த்த வேண்டும். தவறும் பட்சத்தில் மாற்று இடம் வழங்கப்படும் என் றால் அவர்களுக்கு அதே பகுதியில் அரசு நிலங்களை கண்டறிந்து உரிய முறையில் வீடுகளை கட்டித் தருவ தும், எடுக்கப்படுகிற இந்த வீடுக ளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்குவதும், இவர்க ளுடைய வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள் ளப்பட்டுள்ளது.