சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை பெய்த திடீர் மழையால் அரும்பாக்கம் அண்ணா வளைவு அருகே மருத்துவமனை முன்பு குளம் போல் மழை நீர் தேங்கி நின்றது. இதேபோல் சென்னையில் பல இடங்களில் மழைநீர் தற்காலிக தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.