districts

img

கோவையில் செயற்கை நுண்ணறிவு மாடல்கள்

கோவை, டிச.16- துபாய் போன்ற நாடுகளில் உள்ளது  போல கோவையிலும் செயற்கை நுண்ணறிவு மாடல்கள் உருவாக்கப்பட  வேண்டும் என செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சிறப்பு மையத்தினை அமைச் சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்  வைத்து பேசித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சிறப்பு  மையத்தினை தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் பி.டி. ஆர்.பழனிவேல் தியாகராஜன் திங்க ளன்று துவக்கி வைத்தார். பின்னர்  அந்த ஏ.ஐ நிறுவனத்தின் செயல்பாடு கள் குறித்து கலந்து ஆலோசித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த  ஆட்சியாளர்கள் அப்படியே போட்டு சென்ற கோவை எல்காட்டை, உச்ச நீதிமன்றம் வரை சென்று திறந்துள் ளோம். இந்த துறைக்கு பொறுப் பேற்ற பின்னர் மாதம் ஒரு முறை வெளி நாடு சென்று மார்கெட் செய்து தமிழகத் திற்கு நிறுவனங்களை ஈர்த்து வரு கின்றனர். கோவையில் சென்னை அள விற்கு ஐடி நிறுவனங்களை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றது. தமிழகத்தில் குளோபல் பின் சிட்டி போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் திறன் அதிகளவில் இருக்கின்றது. 6% மக்கள் தொகை இருக்கும் ஊரில் 20% உற்பத்திக்கான திறன் உள்ளவர்களை நாம் உருவாக்குகின்றோம். துபாய் போன்ற நாடுகளில் உள்ளது போல  கோவையிலும் செயற்கை நுண்ணறிவு மாடல்கள் உருவாகப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவால் வேலை வாய்ப்பு இழப்பு ஏற்படவே 20 ஆண்டு களுக்கும் மேலாகும், இந்த ஏஐ துறை யில் நாம் இப்போதுதான் 5 ஆம் வகுப் பில் இருக்கிறோம். இப்போதைக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். மனி தன் கண்ணில் பார்க்கும் அளவிற்கு இயந்திரத்திற்கு தகவல்களை கொண்டு செல்லவே பல மணிநேரங் கள் ஆகும். சர்வதேச நிறுவனங்கள் தமி ழகத்திற்கு வர தயாராக இருக்கினறன.ஓவ்வொரு நகரத்திற்கும் ஒரு வாய்ப்பு  இருக்கும். இந்தியாவிற்கு மென் பொருள் துறையில் அதிகமான வாய்ப்பு கள் இருக்கிறது. உலக அளவில் இந்த  துறையில் அளவில்லா வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றது என்றார்.