அவிநாசி, ஜன.27- திருமுருகன்பூண்டியில் குடியரசு தினத்தன்று பல்வேறு கலை, இலக்கிய நிகழ்வுகளுடன் கலை இரவு நடைபெற் றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருமுருகன் பூண்டி கிளை சார்பில் நகராட்சி அலு வலகம் எதிரே உள்ள மைதானத்தில் கலை இரவு நடைபெற்றது. மாவட்டத் துணைத்தலைவர் சீரங்கராயன் துவக்கி வைத்தார். திருமுருகன்பூண்டி நிர்வாகி சந்தோஷ்குமார் வரவேற்றார். இதைத் தொடர்ந்து உடுமலை துரையரசன் கலைக்குழுவினர் நாட்டுப்புற பாடல் கள் பாடினார்கள். ராக்கியாபாளையம் அரசுப்பள்ளி மாணவிகள் சுருதி ஆங்கி லத்தில், சுபிக்ஷா தமிழில் பேசினர். வீர வர்மா சிலம்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து நிமிர்வு பறை இசை, பெரியாயிபாளையம் பகுதியைச் சேர்ந்த பரதநாட்டிய குழுவினர், விடு தலை கும்மியாட்டம், பல்லடம் மேஜிக் பாபுவின் மாயாஜால நிகழ்ச்சி, அரசு பள்ளி மாணவியின் கல்வி குறித்தும், உடுத்தும் ஆடை குறித்தும், வேலை குறித்தும் குறும்படம் வெளியிடப்பட் டது. இறுதியாக கோவை வழக்கறிஞர் ஆனந்தன் நிறைவுறையாற்றினார். பெருந்திராளனோர் கலந்து கொண்ட னர். இதில் சங்கத்தின் திருமுருகன் பூண்டி நிர்வாகி ராஜகுரு நன்றி கூறி னார்.