உடுமலை, ஜன.29- உடுமலை அருகே உள்ள சைனிக் பள்ளியில் கலை போட்டிகள் நடை பெற்றன. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி நகரில் சைனிக் பள்ளி இயங்குகிறது. இப்பள்ளி யில் நடப்பு கல்வியாண்டில், அகில இந்திய அளவிலான கலை போட்டிகள் நடைபெற்றன. இந்த கலை போட்டிகள் சைனிக் பள்ளியில் முதல் முறையாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு அமராவதிநகர் சைனிக் பள்ளி முதல்வர் கேப்டன் நிர்மல் கே.ரகு முன்னிலை வகித்தார். இதில் நல்கொண்டா (ஆந்திரா), சந்திரபூர் (மகாராஷ்ட்ரா), மெயின்புரி (உத்திர பிரதேசம்) மற்றும் நாளந்தா (பிஹார்) ஆகிய சைனிக் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண் டனர். இதில் குழு பாடல், குழு கருவி இசை, மைம் (மவுன நாடகம்), குறு நாடகம் மற்றும் குழு நடனம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் சந்திராபூர் சைனிக் பள்ளி குழு பாடல் மற்றும் குழு இசைக் கருவிக்கான போட்டிகளில் வெற்றி பெற்றது. மவுன நாடகத்தில் நல்கொண்டா சைனிக் பள்ளி வென்றது. குழு நடனப் போட்டி யில் மெயின்புரி சைனிக் பள்ளியும், குறு நாடக போட்டியில் நாளந்தா சைனிக் பள்ளி வெற்றி பெற்றது. சந்திராபூர் சைனிக் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டிகளுக்கு நடுவர்களாக கோவை இயற்கை அறிவியல் அறக் கட்டளை இயக்குநர் டாக்டர் சீனி வாசன், உடுமலை கே.வி. முதல்வர் சக்ரதாராபிரஸ்டி, உடுமலை சீனிவாச பொதுப்பள்ளி முதல்வர் சத்தியபாமா ஆகியோர் செயல்பட்டனர். அமராவதி சைனிக் பள்ளி நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் தீபு, ஆசிரியர் எஸ்.பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.