districts

img

சுற்றுலா பயணிகளின் வருகை: திணறும் உதகை

உதகை, ஏப்.9- கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில், உதகை வரும் சுற்றுலா பய ணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சமவெளி பகுதிகளில்  கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியசை தாண்டிவிட்டது.  இதனால் குளுமையான காலநிலை நிலவும் மலைப்பிரதேசமான நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.  வார விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்த வண் ணம் உள்ளனர். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஞாயிறன்று வழக்கத்தைவிட சுற் றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந் தது. நுழைவுவாயிலில் டிக்கெட் பெற கூட்டம் அலைமோதியது.

கண்ணாடி மாளிகையில் பல்வேறு வகையான ரகங்களை சேர்ந்த பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதில் பூத்துக் குலுங்கிய மலர்களை சுற் றுலா பயணிகள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேல் பகுதியில் உள்ள கண்ணாடி மாளி கையில் பல வகையான கள்ளி செடிகளை பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகள் தங்க ளது குடும்பத்தினருடன் புல்வெளியில்  அமர்ந்து ஓய்வு எடுத்தனர். அதேபோல்  உதகை ரோஜா பூங்காவில் பல வண்ணங் களில் பூத்துக் குலுங்கிய ரோஜா மலர்களை  கண்டு ரசித்தனர். அதேபோல உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், சுற்றுலா பய ணிகளின் குழந்தைகள் விளையாட்டு உபகர ணங்களில் விளையாடி பொழுதை கழித்த னர். குதிரை சவாரி செய்தும் உற்சாகமடைந்த னர். மேலும் பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், தேயிலை பூங்கா  உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் தங்களது சொந்த வாகனங்களில் வந்ததால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் உதகை கமர் சியல் சாலை, சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை, ஆட்சியர் அலுவலக சாலை யில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவ ரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் காலை மற்றும் மாலை நேரத் தில் குன்னூரில் இருந்து உதகை வரும் வாகனங்களை லவ்டேல் சந்திப்பில் காந்தி நகர் வழியாக திருப்பி விடுகின்றனர். போலீ சார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். உதகையில் கோடை சீசன் தொடங்குவதற்கு முன்பே சுற் றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டி உள் ளது.