districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

குழந்தைகளை கடத்துவதாக பொய் செய்தி பரப்பியவர் கைது

திருப்பூர், மார்ச் 10- திருப்பூரில் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளத்தில் பொய் செய்தி பரப்பிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெருப்பெரிச்சல், வாவி பாளையம் பகுதிகளில் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் பொய்யான குறுஞ்செய்தி களை வாட்ஸ்அப் குழுக்களில் அனுப்புவதாக காவல் துறைக்கு தகவல் பெறப்பட்டது. இதுசம்மந்தமாக வாட்ஸ்ஆப் குழுக்களை ஆராய்ந்து பார்த்து, ஆறுமுகம் என்பவர் பொய்யான செய்திகளை பரப்பியதை உறுதி செய்து, அவர் மீது குற்றப்புலனாய்வு பிரிவு காவல் நிலை யத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொ டர்ந்து அவரை சனியன்று கைது செய்த காவல் துறை யினர், நீதித்துறை நடுவரிடம் நேர்நிறுத்தி நீதிமன்ற காவ லுக்கு அனுப்பி வைத்தனர். இதுபோன்று தவறான, பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி  கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருப் பூர் மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வேலை நேரத்துக்கு முன்பு குடிநீர் விநியோகம் செய்ய கோரிக்கை

திருப்பூர், மார்ச் 10- பனியன் தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழி லாளர்கள் வேலை நேரத்திற்கு முன்பாக காலை வேளை யில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று உள் ளாட்சி அமைப்புகளுக்கு ஐஎன்டியுசி கோரிக்கை விடுத் துள்ளது. திருப்பூரில் உள்ள ஐஎன்டியுசி அலுவலகத்தில் கார் மெண்ட்ஸ் உழைக்கும் மகளிர் பேரவைக்கூட்டம்  ஞாயிறன்று நடைபெற்றது. இப்பேரவையில், கோடைக் காலம் நெருங்கும் நிலையில் குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும். வேலை நேரத்திற்கு முன்பாக  காலை வேளையில் 5.30 மணி முதல் 7 மணிக்குள் குடி நீர் விநியோகம் செய்ய வேண்டும். கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்ததை போல, சிறு  குறு நிறுவனங்களுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண் டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி  மூன்றில் ஒரு பங்கு பெண் வேட்பாளர்களை நியமிக்க  வேண்டும். திருப்பூர் வடக்கு பகுதியில் அரசு மகளிர் கல் லூரி அமைக்க வேண்டும். புதுவையில் சிறுமியை பாலி யல் வன்கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண் டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் ஐஎன்டியுசி செயலா ளர் சிவசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை வயல் வழியாக இறந்தவரை தூக்கிச்சென்ற அவலம்

தருமபுரி, மார்ச் 10- காரிமங்கலம் அருகே மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால், இறந்த வரின் உடலை நெல் வயலில் எடுத்துச்சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கும்பாரஹள்ளி ஊராட்சியில் உள்ள பீரன்  கொட்டாய் பகுதியில் சுமார் 150 குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய மயானம் இல்லாமல் இருந்துள்ளனர். இதன் பின் வருவாய்த்துறை மூலம் பார்த்ததில் பீரன்கொட்டாய் கிராமத்திற்கு உரிய ஒன் றரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் இருந் துள்ளது. ஆனால், அந்த நிலம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய  எடுத்து செல்லும்போது அப்பகுதி பொதுமக் கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்ற னர். இதுகுறித்து பலமுறை அரசு அலுவலர் களிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.  அப்போது அவரது உடலை அடக்கம் செய்ய  அப்பகுதி பொதுமக்கள் மயானத்திற்கு எடுத் துச் சென்றனர். அப்போது சாலை வசதி இல் லாததால், நெல் வயலில் இறங்கி எடுத்து சென் றனர். எனவே, இறந்தவரின் சடலத்தை கொண்டு செல்ல போதிய சாலை வசதி ஏற்ப டுத்தித்தர வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சேலம்: போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் காவல் உதவி ஆய்வாளர் மீது மாதர் சங்கம் புகார்

சேலம், மார்ச் 10- பாலியல் குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது தாக்குதல் நடத்திய சேலம் நகர காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர். சேலம் சௌடேஸ்வரி கல்லூரி முதல்வரின் பாலியல் அத்துமீறலை கண்டித்தும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த முயன்றனர். இதற்கு அனுமதி மறுத்த சேலம் நகர காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்களை அத்துமீறி தாக்கியதோடு, குண்டுகட்டாக கைது செய்தனர். அதில், காவல் உதவி ஆய்வாளர் மேனகா என்பவர், மாதர் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களின் ஆடைகள் கிழியும் அளவிற்கு கொடுமைப்படுத்திய சம்பவம் அரங்கேறியது. பாலியல் குற்றவாளிக்கு எதிராக போராட்டம் நடத்திய ஜனநாயக அமைப்பினர் மீது காவல்துறையினர் இப்படி நடந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, போராட்டக்காரர்களை தாக்கிய சேலம் நகர காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி, மாவட்ட நிர்வாகி டி.பரமேஷ்வரி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, பொன்.ரமணி ஆகியோர் பங்கேற்றனர்.

திரையரங்கில் தவறவிட்ட தங்கக் காப்பை மீட்டுக்கொடுத்த தூய்மைப் பணியாளர்கள்!

சேலம், மார்ச் 10- திரையரங்கில் தவறவிட்ட தங்கக் காப்பை குப்பையிலிருந்து மீட்டுக்கொடுத்த சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் செயலை பலர் பாராட்டி வருகின்றனர். சேலம் மாநகராட்சி பகுதியில் இருந்து வரும் 100க்கும் மேற்பட்ட டன் குப்பைகள் தினந்தோறும் சேகரிக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது. இத னடிப்படையில் சூரமங்கலம் உழவர் சந்தை  அருகில் உள்ள திரையரங்க வளாகத்தில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு குப்பை சேகரிக்கும் இடத்தில் ஊழியர்கள் வாகனத்தில் கொண்டு சென்றனர். அப் போது, சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கும ரேசன் என்பவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒருவர், உழவர் சந்தை அருகே உள்ள திரையரங்கில் படம் பார்க்க  வந்தபோது தனது குழந்தையின் கையில் இருந்து தங்கக் காப்பு கீழே விழுந்து விட்டது,  திரையரங்கில் எங்கும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அதனால் ஏதேனும் இங்கு குப்பை சேகரிக்கும் போது கிடைத்ததா? அல் லது இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட குப்பையில் உள்ளதா? என்பதை சரி பார்க்க வும் எனக் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து குப்பை எடுத்து செல்லப் பட்ட வண்டியை ஓரங்கட்டிய மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக வண் டியில் இருந்த குப்பைகளை தரம் பிரிக்க தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரமாக அலசி ஆராய்ந்தபோது குப்பையில் தங்கக்  காப்பு கிடந்ததை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் மணிவேல் கண்டு பிடித்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு காணாமல் போன தங்கக் காப்பு கிடைத்து விட் டதாக தகவல் தரப்பட்டதையடுத்து அவர்கள் நேரடியாக திரையரங்கிற்கு வந்து காப்பை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர். காப்பை கண்டு பிடித்துக் கொடுத்த தூய் மைப் பணியாளர்களுக்கு தங்களது நன் றியை தெரிவித்தனர். தூய்மைப் பணியாளர் களின் இந்த செயல் அனைவரின் பாராட்டை யும் பெற்று வருகிறது.

கயிறு உற்பத்தி ஆலையில் தீ விபத்து

ஈரோடு, மார்ச் 10- பெருந்துறையை அடுத்துள்ள குன்னத்தூர், குறிச்சி  பகுதியில் உள்ள கயிறு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை யில் தீ விபத்து ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள குன்னத் தூர் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் அருள் முருகன் (45).  இவர், அப்பகுதியில் கயிறு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை  நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தொழிற்சாலையில் திடீ ரென தீப்பிடித்து எரிய துவங்கியது. உடனடியாக ஊத்துக் குளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப் புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் உற்பத்தி செய்யப்பட்டிருந்த கயிறுகள் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவை தீயில் எரிந்து சேதம்  அடைந்தது. இச்சம்பவம் குறித்து குன்னத்தூர் போலீசார் விசா ரித்து வருகின்றனர்.

பறக்க முடியாமல் இருந்த அரியவகை ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைப்பு

உதகை,மார்ச் 10- நீலகிரி மாவட்டம், கிளன் ராக் பகுதியில் பறக்க முடியாமல் இருந்த அரிய வகை ஆந்தையை காப்பாற்றிய பொதுமக்கள், வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மலை மாவட்டமான, நீலகிரியில் ஏராள மான அரிய வகை பறவையினங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் உதகை  அரசு தாவரவியல் பூங்கா அருகேயுள்ள கிளன் ராக் காலனிப் பகுதியில் அரிய  வகை ஆந்தை ஒன்று பறக்க முடியாமல்  இருந்துள்ளது. அந்த ஆந்தையை ஏராள மான காகங்கள் தாக்க முயன்றுள்ளன. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள், பாதிக்கப்பட்ட ஆந்தையை மீட்டு, வனத்து றையினரிடம் ஒப்படைத்தனர்.

கூலித்தொழிலாளி படுகொலை!
கூலித்தொழிலாளி படுகொலை! கோவை, மார்ச் 10-  கோவை துடியலூர் அருகே காசி நஞ்சேகவுண்டன் புதூர்  பகுதியில் கூலித் தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்திக்  கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன். இவ ரது மகன் ஜெய்கணேஷ். 35 வயதான இவர் கோவை துடி யலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் தங்கி,  கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ஞாயி றன்று அதிகாலை 6 மணியளவில் காசி நஞ்சேகவுண்டன் புதூர்  பகுதியில் வந்து கொண்டு இருந்த போது, இரு சக்கர வாக னத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் ஜெய்கணேஷை கத்தியால்  குத்தி உள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த  வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீ சார், ஜெய்கணேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோத னைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறன்றனர். அதிகாலை நடந்த கொலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்

தருமபுரி, மார்ச் 10- அரசு மருத்துவமனை அருகே உள்ள சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்  என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே ஜிஎம் தியேட்டர் சாலையோரம் அதி களவு குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக் கள் அதிகம் வந்துசெல்லும் பகுதியான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் வங்கி,  தனியார் வணிக கடைகள், உணவகங்கள், தேநீர்கடைகள் அதிகளவில் உள்ளன. மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்துசெல்லும் பகுதியில் அதிகளவு குப்பைகள் காணப் படுவது காண்போரை முகம் சுழிக்க வைக்கிறது. எனவே, நக ராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அகற்ற வேண் டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.