கோவை, ஜூன் 5- மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலி யல் வக்கிரத்தில் ஈடுபட்ட பாஜக எம்.பி., பிரிஜ் பூசனை கைது செய்ய வலியு றுத்தி வாலிபர், மாணவர் மற்றும் விவ சாயிகள் சங்கம், தொழிற்சங்கத்தினர் ஆவேச எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்ட னர். மல்யுத்த பயிற்சி சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பி யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரி வித்தனர். ஆனால், ஒன்றிய அரசின் தில்லி காவல்துறை எவ்வித நடவ டிக்கையும் மேற்கொள்ளாத நிலையில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நீதிமன்றம் தலை யிட்ட பிறகு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் தற்போது வரையில் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், தலைநகர் தில்லியில், போராடும் மல்யுத்த வீராங்கனைகளி டம் காட்டு மிராண்டித்தனமான நடவ டிக்கைகளை தில்லி காவல்துறை மேற் கொண்டு வருகிறது. இதனையடுத்து, அனைத்து தொழிற்சங்கங்கள், விவ சாயிகள் சங்க கூட்டமைப்பு, மாதர் அமைப்புகள், வாலிபர், மாணவர் அமைப்புகள் நாடு முழுவதும், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக போராட்ட களத் தில் குதித்துள்ளது.
இதன்ஒருபகுதியாக, மல்யுத்த வீரர் களுக்கு ஆதரவு தெரிவித்தும், பாஜக வின் பிரிஜ் பூஷண் சரண் சிங் எம்பி.,யை கைது செய்ய வலியுறுத்தியும், நாடு முழுவதும் ஒன்றி அரசு அலுவலங்களை முற்றுகையிடும் போராட்டத்திற்கு இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்க தலைமை அறை கூவல் விடுத்தது. இதன்தொடர்ச்சி யாக, கோவை ரயில் நிலையத்தை இவ் வமைப்பினர் முற்றுகையிட்டனர். முன்னதாக கண்டன பதாகைகளை ஏந்தியும், கோரிக்கை முழக்கங்களை எழுப்பியும் ரயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக வந்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இத னையடுத்து, தடுப்புகளை தாண்டி முன் னேற முயன்றபோது, போராட்டக்காரர் களுக்கும், போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் அர்ஜுன், மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா, செயற்குழு உறுப்பி னர் ராஜா, மாணவர் சங்க மாவட்ட செய லாளர் அசாருதீன், மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன், செயற்குழு உறுப்பி னர்கள் ஆசாத், சந்தோஷ் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோரை போலீ சார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். இதேபோன்று, கோவை பிஎஸ் என்எல் அலுவலகத்தின் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலை வர் சு.பழனிசாமி தலைமை ஏற்றார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் கோவை மாவட்ட செயலாளர் வி. ஆர்.பழனிசாமி, மக்கள் அதிகாரம் அமைப் பின் மாவட்ட செயலாளர் மூர்த்தி உள் ளிட்ட திராளானோர் பங்கேற்றனர்.
நாமக்கல்
திருச்செங்கோடு அருகே வையப் பம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார் பில் பாஜக எம்பி.,யை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஆர்.சக்திவேல் தலைமை ஏற்றார். இதில், ஒன்றிய உத விச்செயலாளர் ப.விஜய், ஒன்றிய துணைத்தலைவர் வேலு, வையப்ப மலை கிளை தலைவர் மோகனப்பிரியா, வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செய லாளர் சு.சுரேஷ், சிஐடியு நிர்வாகிகள் கே.எஸ்.வெங்கடாசலம், வி.தேவராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினார். தருமபுரி இதேகோரிக்கையை வலியுறுத்தி, தருமபுரி மாவட்டத்தில் ஐக்கிய விவ சாயிகள் முன்னணி சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட துணைத்தலை வர் கே.என்.மல்லையன் தலைமை ஏற் றார். இதில், அகில இந்திய விவசாயி கள் மகாசபா மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மக்கள் அதிகாரம் மாநி லச் செயலாளர் முத்துகுமார், மாவட்ட நிர்வாகி இராமலிங்கம், சிஐடியு மாநி லக்குழு உறுப்பினர் சி.கலாவதி, மாவட்ட செயலாளர் பி.ஜீவா, ஏஐசி சிடியு மாவட்ட செயலாளர் சி.முருகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.கோவிந்தசாமி, விவசாயி கள் சங்க நிர்வாகிகள் ரவி, நக்கீரன் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஈரோடு
மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆத ரவாக ஈரோடு சூரம்பட்டி 4 ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் பிரிஜ் பூசன் படத்தைக் கிழித்து எறிந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஒருங்கிணைப்பு குழுவின் கி.வெ.பொன் னையன் தலைமை ஏற்றார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீ சன் கண்டன உரையாற்றினார். தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி கள் முத்துபழனிசாமி, பொன்னுசாமி, சிஐடியு சார்பில் கே.மாரப்பன், புரட்சி கர இளைஞர் முன்னணியின் கனி மொழி, தமிழ்புலிகள் அமைப்பின் சிந் தனை செல்வன் மற்றும் ஏஐடியுசி வி.பி. குணசேகரன், சிஐடியு மாவட்ட செயலா ளர் எச்.ஸ்ரீராம், துணை தலைவர் ஆர்.ரகு ராமன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பா.லலிதா, ஆர்.கோமதி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வி.ஏ.விஸ்வநா தன், விதொச மாவட்ட துணை தலை வர் வி.ஆர்.மாணிக்கம் உள்ளிட்ட விவ சாயிகள், விதொச, சிஐடியு, மாதர், வாலி பர், ஏஐடியுசி, ஏஐசிசிடியு, சிபிஎம்எல், தமிழ்புலிகள், புரட்சிகர இளைஞர் முன்னணியினர் என திரளானோர் பங் கேற்றனர். முன்னதாக, பாலியல் குற்ற வாளி பாஜகவின் பிரிஜ் பூசன் படத்தை கிழித்து எறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
சேலம்
சேலத்தில் அனைத்து தொழிற்சங் கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மெய்யனூர் பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎஃப் தொழிற் சங்க தலைவர் பொன்னி பழனியப்பன் தலைமை ஏற்றார். இதில், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு சாலை போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், மாவட்ட செயலாளர் ஏ.கோவிந்தன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர். வெங் கடபதி, பி. பன்னீர்செல்வம், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் முனுசாமி, முரு கன், தலைவர் பரமசிவம், ஐஎன்டியூசி நிர்வாகி நடராஜன், எச்எம்எஸ் செயலா ளர் கணேசன் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் திரளானோர் பங் கேற்றனர்.