உடுமலை, நவ.28- மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் பெண் மருத்து வர் மீது தாக்குதல் தொடுத்து, அரசுப் பணி செய்ய விடா மல் ரகளையில் ஈடுபட்ட முத்துராஜவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி புதனன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் மடத்துக்குளம் அரசு மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மகளிர் துணைக்குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண் மருத்துவ அலுவலர் மீது தாக்குதல் தொடுத்தவன் மீது புகார் அளிக்கப் பட்டுள்ளது. ஆனால், கடுமையான நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிக்கு சாதகமாக காவல் நிலைய பிணையில் விடு வித்து, சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணமான மடத்துக்கு ளம் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். மடத்துக்குளம் அரசு மருத்துவம னையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு பகல் மற்றும் இரவு நேரத்தில் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசு ஊழியர் மீது தாக்குதல் தொடுத்து பணி செய்ய விடாமல் தடுத்த குற்றவாளிக்கு துணை போகும் காவல்துறையை கண் டிப்பதுடன், குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தப்பட்டது. முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராணி தலைமை வகித்தார். மகளிர் துணைக்குழு அபி ராமி, அனைத்துதுறை ஓய்வூதியார் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.