districts

ஊழல் பேர்வழி அதானியை கைது செய்திடுக – சிபிஎம் ஆவேசம்

கோவை, நவ.28- சூரிய மின் உற்பத்தி ஊழலில்  சிக்கியுள்ள அதானியை கைது செய் திடக் கோரி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சூரிய ஒளி மின்சார திட்டத்தில்  முறைகேடாக பல்லாயிரக்காணக் கன கோடி ரூபாய் சம்பாதிக்க,  அதானி குழுமம் கோடிக்கணக் கான ரூபாய் லஞ்சம் கொடுத்த சம் பவம் அமெரிக்காவில் எதிரொலித் துள்ளது. லஞ்சம் கொடுத்ததை மறைத்து முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் அதானியை கைது செய்ய  பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள் ளது.  மோசடி செய்த தொழிலதிபர்  அதானியை இந்திய அரசு  கைது செய்ய வேண்டும். வழக்கை சிபிஐ  விசாரிக்கவும் வலியுறுத்தி வியாழ னன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட் டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி அறைகூவல் விடுத்து உள் ளது. இதன்ஒருபகுதியாக கோவை  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சி.பத்மநாபன் தலைமையேற் றார். இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.மனோகரன், கே.அஜய்குமார், கே.எஸ்.கனக ராஜ், என்.ஆறுச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே. வெள்ளியங்கிரி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாமன்ற குழுத்  தலைவர் வி.இராமமூர்த்தி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  சேலம் சேலம் கோட்டை மைதானம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் மேவை.சண்முகராஜா தலைமை வகித்தார். இதில் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.வெங்கடபதி, எம்.குண சேகரன், பொன்.ரமணி, கிழக்கு மாநகரச் செயலாளர் பச்சமுத்து, வடக்கு மாநகரச் செயலாளர் பிர வீன்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கனகராஜ் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலைப் பகுதி யில், சிபிஎம் மாவட்டச் செயலாளர்  எஸ்.கந்தசாமி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.ரங்கசாமி, எம்.அசோகன், ந.வேலுசாமி, கே.தங்கமணி, சு. சுரேஷ், ஏ.டி.கண்ணன், எம்.ஆர். முருகேசன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பி.பெருமாள், சக்திவேல், துரைசாமி, ரவி, சின்னசாமி, செல் வராஜ், சரவணன், பழனியம்மாள், ராணி, தேன்மொழி, நர்மதாதேவி, இடைக்கமிட்டி செயலாளர்கள் கந்தசாமி, குணசேகரன், ரமேஷ், லட்சுமணன், அறிவுடைநம்பி, கண் ணன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு, சிபிஎம் மாவட்டச்  செயலாளர் ஏ.குமார் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.மாரி முத்து, எம்.முத்து, எஸ்.கிரைஸா மேரி, வே.விசுவநாதன், ஆர்.மல்லிகா, தி.வ.தனுசன், ஆர்.சின்ன சாமி, ரவி, இடைக்கமிட்டி செயலா ளர்கள் ஆர்.ஜோதிபாசு, கே. கோவிந்தசாமி, எஸ்.எஸ்.சின்ன ராஜ், ஆ.ஜீவானந்தம், சேகர், சக்தி வேல், தங்கராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.குப்புசாமி, கே. என்.மல்லையன், கே.பூபதி, ஏ. ஜெயா, ராஜி உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.  திருப்பூர் இதேபோன்று, அதானியை கைது செய்யக்கோரி திருப்பூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்க ளில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,  கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்  கே.காமராஜ், மாவட்டச்செயலா ளர் செ.முத்துக்கண்ணன் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  உதகை நீலகிரி மாவட்டம் உதகை ப்ளூ  மவுண்டன் தபால் நிலையம் அலு வலகம் முன்பு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல். சங்கர லிங்கம் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில், சிபிஎம்  மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்க ரன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.வினோத், மாவட்டக் குழு  உறுப்பினர் மகேஷ், குன்னூர்  தாலுகா செயலாளர் இளங்கோ உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர். முடிவில், உதகை தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் நன்றி கூறினார்.