districts

நாமக்கல் நகராட்சிக்கு பல கோடி ரூபாய் வரி பாக்கி

நாமக்கல், பிப்.19- நாமக்கல் நகராட்சிக்கு செலுத்த வேண் டிய ரூ.10.60 கோடி வரி பாக்கியை வசூல் செய் யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வரு கின்றனர். நாமக்கல் நகராட்சிக்கு சொத்து வரி,  தொழில் வரி, காலிமனை வரி, குடிநீர் கட்ட ணம், பாதாள சாக்கடை இணைப்பு கட்ட ணம் மூலம் நகராட்சிக்கு வரவேண்டிய வரி வசூல் ரூ.10 கோடியே 60 லட்சம் நிலுவையில் உள்ளது. இந்த வரி பாக்கியை பொதுமக்கள் கடந்த நவ.30 ஆம் தேதிக்குள் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், அவ காசம் முடிந்த பிறகும் பொதுமக்கள் செலுத்த முன்வரவில்லை. தற்போது வசூல் செய்யும் பணி நகராட்சியில் தீவிரப்படுத்தப்பட்டு உள் ளது. நகராட்சி வருவாய் பிரிவு ஊழியர்களு டன் இணைந்து நகராட்சியில் பிற துறை களில் பணியாற்றும் ஊழியர்களும் வீடு, வீடாக சென்று வரி வசூலில் ஈடுபட்டு வரு கின்றனர். வருகிற மார்ச் மாதம் இறுதிக்குள் நிலுவையில் உள்ள வரிகளை வசூல் செய்ய நகராட்சி அலுவலர்கள் தீவிரம் காட்டி வருகி றார்கள். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறு கையில், நாமக்கல் நகராட்சியில் 55 ஆயி ரத்து 203 சொத்து வரி விதிப்புகள் உள்ளன. குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், ஜவுளிகடைகள், நகைகடைகள் முதல் சூப் பர் மார்க்கெட் வரை அதன் உரிமையாளர் கள் சொத்துவரி செலுத்த வேண்டும்.

ரூ.13.70 கோடி மொத்தம் தொழில்வரியாக வசூலாக  வேண்டும். ஆனால் இதுவரை ரூ.9 கோடி  மட்டும் வசூலாகியுள்ளது. நாமக்கல் நகராட்சி பகுதியில் 7 ஆயிரத்து 58 காலிமனை வரி விதிப்புகள் உள்ளன. பல ஆண்டுகளாக ரூ.2.45 கோடி காலிமனை வரி நிலுவையில் உள்ளது. இந்த வரியை விரைவாக செலுத் தாதவர்களின் காலிமனைகள் பிற்காலத்தில் விற்பனை செய்ய முடியாத அளவுக்கு பத்திர பதிவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க  ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல தொழில் வரி செலுத்தி தொழில் செய்ப வர்கள் 6 ஆயிரத்து 751 பேர் உள்ளனர். இவர் கள் மூலம் நகராட்சிக்கு ரூ.2 கோடி வரி வசூல் நிலுவையில் உள்ளது. அவர்களின் தொழில்  உரிமத்தை ரத்து செய்ய வணிக வரித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. நாமக்கல் நகராட்சி பகுதியில் மொத்தம் 23 ஆயிரத்து 593 குடிநீர் இணைப்புகள் மற்றும் 9 ஆயிரத்து 977 பாதாள சாக்கடை இணைப்பு கள் உள்ளன. இதன் மூலம் நகராட்சிக்கு வர வேண்டிய வருவாய் ரூ.3 கோடியே 20 லட்சம் நிலுவையில் உள்ளது. மொத்தமாக நாமக் கல் நகராட்சிக்கு ரூ.10 கோடியே 60 லட்சம்  வரை வரி பாக்கி உள்ளது. இவற்றை பொது மக்கள் விரைவாக செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் குடிநீர் இணைப்பு, பாதாள  சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும். மேலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப் படும், என்றனர்.